Sunday, July 15, 2007

டாக்டர் ஹனீஃபை விடுவிக்க ஆஸ்திரேலியா மறுப்பு!

டாக்டர் ஹனீஃபை விடுவிக்க ஆஸ்திரேலியா மறுப்பு
!14 நாட்களுக்குப் பிறகு திடிர் குற்றச்சாட்டை சுமத்தியது. அவரை எதிர்பார்த்து மனைவியும் பெற்றோரும் ஏமாற்றம்
.இது ஒரு நாடகம் என ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சி.ஜே.ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் கிளாஸ்கோவில் நிகழ்ந்த வாகன குண்டு வெடிப்பு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிடிக்கப்பட்டு விசாரிக்கப் பட்டு வரும் ஹனீஃப் மீது ஆரம்பம் முதலே எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. சம்பிரதாயப் பூர்வமான விசாரணை மட்டுமே இது என ஆஸ்திரேலிய நிர்வாகம் நேற்று அதிகாலை வரை அறிவித்து வந்தது.
ஆஸ்திரேலியக் காவல்துறையின் சாதாரண அதிகாரி முதல் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டு வரை ஹனீஃப் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று கூறினர். பெங்களூர் காவல்துறையும் ஹனீஃபின் வீட்டில் எந்த தடயமும் கிடைக்க வில்லை என்று ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத் தக்கது.
பத்திரிகைகளில் ஹனீஃப் இன்று விடுவிக்கப் படுவர். நாளை விடுவிக்கப்படுவார் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சனிக்கிழமை (14.07.07) முஹம்மது ஹனீஃப் மீது திடீரென குற்றச்சாட்டு ஒன்றை ஆஸ்திரேலியக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கஃபிலின் சகோதரர் சபீலுக்கு சிம் கார்டு கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் சி.ஜே.ராவ் தெரிவித்திருக்கிறார்.
திறமை வாய்ந்த குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தினால் ஹனீஃபை காப்பாற்றும் வாய்ப்பு உள்ளது என்றும் சி.ஜே. ராவ் தெரிவித்துள்ளார்.
27 வயதான ஹனீஃப் அண்மையில் தனக்கு பிறந்த பெண் குழந்தையை முதன் முதலாக தற்போது தான் பார்க்கப் போகிறார் என ஏக்கத்துடன் காத்திருந்த அவரது மனைவி பிர்தவ்ஸ் அர்ஷியா சோகத்தில் மூழ்கினார். ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும் என்றார். சிம் கார்டு ஒருவருக்கு கொடுப்பதாலே யாரும் குற்றவாளியாக மாட்டார்கள் என்றும் ஃபிர்தவ்ஸ் அர்ஷியா தெரிவித்தார்.
சர்வதேச பொது மன்னிப்புச் சபை ஹனீஃபை விடுவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
கஃபில் மட்டுமே சம்பவத்துக்கு தொடர்புடையவர் ஹனீஃபுக்கு எந்த தொடர்பும் இல்லை என இந்திய புலனாய்வுத் துறை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

No comments: