Sunday, September 2, 2007

சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது.


சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது
.சச்சார் குழு பரிந்துரைக்கான செயல் திட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் போதிய அளவு இடம் வழங்காததை தவிர்க்க உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் மக்களவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரநிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான உயர் மட்டக்குழு தனது அறிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய 15 அம்ச செயல் திட்டத்தை மத்திய அரசுக்கு சச்சார் குழு தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த சிறுழுôன்மையினர் நலத்துறை அமைச்சர் அந்துலே இது ஒரு சரித்திர சிறப்பு மிக்க அறிக்கை என்றும் அதை தாக்கல் செய்யும் இந்த நேரம் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று அவர் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் ஆட்சி முறையில் முஸ்லிம்களுக்குப் போதிய பங்கு வழங்கப்படாதது தொடர்பாக சச்சார் குழு கவலை தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அந்துலே அந்தக் குறைபாடுகளைக் களைய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்ருப்பதாக தெரிவித்தார்.
சச்சார்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்தைப் போல அக்குழு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க இக்குழு பார்த்துக் கொள்ளும். இதன் மூலம் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என்றும் அமைச்சர் அப்துர்ரஹ்ôன் அந்துலே கூறினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளையும், வேலை வாய்ப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் 338 நகரங்களில் கட்டமைப்பு வசதிகளில் உள்ளக் குறைபாடுகளைக் களைவதும் அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்துலே தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்காக மூன்று கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மவ்லானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கான மூலநிதி அதிகரிக்கப்படும். முஸ்லிம்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றுக்கான விரிவாகத் திட்டத்தை உருவாக்கவும் அதைச் செயல்படுத்தி கண்காணிக்கவும் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என்றும் அந்துலே தெரிவிக்கிறார்.
முஸ்லிம் பெண்கள் உயர்கல்வி படிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேவையான இடங்களில் மகளிர் கல்விக் கூடங்கள் நிறுவப்படும். முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவில் வாழும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் திறக்கப்படும். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைத் திறக்க முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பகுதிகளில் சிறப்பு எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படும்.
முஸ்லிம்களுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் திறக்கப்படும்.
மதரஸாக் கல்வியை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்டும். மேலும் அவற்றில் உயர்கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உர்து மொழி பிராந்திய மொழியாக அறிவிக்கப்பட்டு அதில் கல்வி கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.மேலும் முஸ்லிம்களின் உடல்நலன் மற்றும் குடும்ப நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்துலே கூறினார்.
வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உரிய முறையில் செலவிடவும் பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.முஸ்லிம்களின் அவலநிலையை அகற்ற சமவாய்ப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று மேலும் அமைச்சர் உறுதி அளித்தார்

Friday, August 31, 2007


ஹைதராபாத் குண்டுவெடிப்பு
சூழ்ச்சியின் பின்னணி
ஹைதராபாத் நகரில் மக்கள் அதிகம் கூடும் லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் என்ற உணவகத்திலும் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி களில் இருந்து தடயங்களை சேகரித்த போது நியோஜெல்லி90 என்ற அமோனியம் நைட்ரோ ரசாயனம் கலந்த வெடிகுண்டு மருந்து பயன்படுத்தப்பட்டிருப் பதாக காவல்துறை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் அந்நிய நாட்டு தீவிரவாத சக்திகளின் கைவரிசை இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப் படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அறிவித்திருக்கிறார். ''மீண்டும் பொடா சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்'' என குண்டு வெடிப்பு சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த அத்வானி வழக்கம்போல தெரிவித்திருக் கிறார்.
இந்த குண்டுவெடிப்பில் முஹம்மது அலி என்ற 6 வயது சிறுவன், அமீர் என்ற 8 வயது சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 11 முஸ்லிம்களும் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா வின் அஹமது நகர் மாவட்டத் தில் அமிருத் வாகினி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் ஏழு மாணவர் களும் இச்சமயத்தில் கொல்லப் பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் ரஹீமுன்னிஸா பேகம் (48), முஹம்மது வாஹித் அலி (21), அஹ்யா அப்துல் காதர் (17), அக்ரமுல்லாஹ்கான் (22), அஹ்மது முஹினுத்தீன் (45), முஹம்மது சலீம் (47), ஃபரீதா நாஸ் (35), முஹம்மது அலி (6), அமீர் (8), இப்ராஹிம்கான் (43), மற்றும் இர்ஷாத் அஹ்மத் (19) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பமே கூண்டோடு பலியான பரிதாபச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோகுல் சாட் பண்டார் என்ற துரித உணவகத்தில் முஹம்மது சலீமின் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் பலியாகி விட்டனர். ஹுமாயுன் நகர் என்ற பகுதியில் கோல்கொண்டா அடுக்குமாடி குடியிருப்பில் சலீமின் குடும்பம் வசித்து வந்துள்ளது.
சிதறிய சலீம் குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்து கோல் கொண்டா குடியிருப்புவாசிகள் கதறியது நெஞ்சைப் பிழியும் காட்சியாக இருந்தது.''ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டதே'' என்று ஒரு பெண் கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கதறினார்.
குண்டுவெடிப்பு குறித்த செய்தி கிடைத்ததும் சலீமின் சகோதரர் சமீர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். செல்பேசி அழைப்புக்கு பதில் வராததால் ஒவ்வொரு மருத்துவ மனையாகச் சென்று பார்த்திருக் கிறார். இறுதியில் உஸ்மானியா மருத்துவமனையில் அந்தக் குடும்பமே உடல் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.''இந்த படுபாதகச் செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை இழுத்து வந்து பொது இடத்தில் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும்'' என பலியானவர் களின் உறவினர்கள் குமுறலுடன் கூறினர்.
''பயங்கரவாதிகள், மனித நேயத்திற்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள்; இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என ஆவேசமாகக் குறிப்பிட்டார் அஸதுல்லாஹ் கான். இவர் இந்த குண்டுவெடிப் பில் தனது ஒரே மகனான அக்ரமுல்லாகானை பறிகொடுத் தவர். அம்பர்பேட் மையவாடியில் தனது ஒரே மகனை அடக்கம் செய்துவிட்டு அவர் பயங்கரவாதி களுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காட்சி கூடியிருந்தவர் களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
''பயங்கரவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் ஹிந்துக்கள். முஸ்லிம் கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது ''என்கிறார் ஃபர்ஹா ஃபரூக்கி என்ற இளம்பெண் அதிர்ச்சி விலகாமல்.
இது மிகவும் கோழைத் தனமான செயல். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசாரணைகள் வெளிப்படையாகவும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என தமுமுக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்காக ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் நகரம் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு நடுநிலையாளர்கள் சில திடுக் கிடும் காரணங்களைக் கூறுகிறார் கள்.
நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆந்திர மாநிலப் பகுதியை சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கும் சதிகளுக்கான காரணங்கள் பற்றி கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறார்கள்.
1. ஹைதராபாத் அதிநவீன தொழில்நுட்ப நகராக விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. இது நம்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்காத சக்திகளின் கண்களை உறுத்துகிறது.
2. ஹைதராபாத் நகரம் முஸ்லிம் களின் பாரம்பரிய பெருமைமிக்க நகராகத் திகழ்கிறது.
3. தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸின் கோட்டையாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. காங்கிரசுக்கு அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கும் மாநிலமாக இருப்ப தோடு ஹிந்துத்துவ சக்திகள் சற்றே துளிர்விடக் கூட வாய்ப்பில்லாத பூமியாகவும் ஆந்திரம் விளங்குகிறது.
4. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்க ளாலும் விரும்பப்படும் தலைவராக ஆந்திர முதல மைச்சர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி விளங்கு கிறார். குறிப்பாக சமூகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் முஸ்லிம்களுக்காக, அவர்களது நிலையை மேம்படுத்த இடஒதுக் கீட்டுக்கு வழிசெய்தார்.
அதற்காக தடங்கல் ஏற்படுத்திய தடைகளை யெல்லாம் உடைத்து முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங் கிட மும்முரம் காட்டினார்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆந்திர அரசுக்கு இடைவிடாத தலைவலி கொடுத்து அரசியல் அரங்கில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளூர் பயங்கரவாதிகளும், வெளிநாட்டு பயங்கரவாதிகளும் கைகோர்த்திருக்கக் கூடும் என நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆந்திர காவல் துறையில் சில கறுப்பாடுகள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் விதமாக, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது, கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழைப் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்களை கவனத்தில் கொண்டு அனைத்துவித நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில் குண்டுவைத்த வர்களுக்கு உதவியவர் என கோழிக்கறி கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். மீண்டும் ஒரு காமெடிக் காட்சியை அரங்கேற்ற வேண்டாம் என காவல்துறையை நாட்டு மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள்.
இதற்கிடையில் மீண்டும் பொடா வேண்டும் என்ற கோரிக்கை காவி முகாமிலிருந்து எழுப்பப்படுகிறது. 'அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அறுபத் தெட்டு அரிவாளாம்' என்ற பழமொழியை அவர்களின் கூற்று நினைவூட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு உச்சக்கட்ட ஆபத்து இவர்களது ஆட்சியில் தான் ஏற்பட்டது என்பதை நாடு மறக்கவில்லை. இவர்கள் குட்டையைக் குழப்பாமல் விலகி இருப்பதே உத்தமம் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்க முயலும் பயங்கர வாதிகளின் படுபாதகச் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெங்களூரு அறிவியல் கழக துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்களை வளைத்து விசாரித்ததோடு சரி. ஓராண்டுக்கு மேல் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறே, மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருந்தால் இத்தகைய செயல்கள் தொடராது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆந்திர அரசும், மத்திய அரசும் இணைந்து சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்

Thursday, August 16, 2007


மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்புகள்:
நெஞ்சில் அலைபாயும் அனல்கள்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
மும்பையில் 1993 மார்ச் 12 அன்றும், கோவையில் 1998 பிப்ரவரி 14 அன்றும் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த தீர்ப்புகள் கடந்த ஜூலை மற்றும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளன.
இந்த தீர்ப்புகள் குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் மும்பையிலும் கோவையிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக அம்மாநகரங்களில் முறையே டிசம்பர் 1992 லி ஜனவரி 1993 மற்றும் நவம்பர் லி டிசம்பர் 1997ல் நடைபெற்ற முஸ்லிம் இன படுகொலைகள் குறித்து மவுனம் சாதித்து நடுநிலையைத் தவறிவிட்டன.
அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த குண்டுவெடிப்புகளை நாம் நியாயப் படுத்தவில்லை. ஆனால், அத்தகைய நாசகாரச் செயல்களை செய்வதற்கு தூண்டுகோலாக இருந்த முஸ்லிம் இன பேரழிவு கலவரங்களை மறப்பது நியாயமா?
மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்ட விதம் மாறுபட்டவை. ஆனால், அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைந்த பொதுவான நிகழ்வு முஸ்லிம் இன பேரழிவு கலவரங்களை நடத்தியவர்கள் மீது அன்றைய அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாததுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த உண்மைகள் குறித்து மூச்சு விடாத செய்தி ஊடகங்கள், குண்டுவெடிப்புகள் பற்றிய படங்களை பிரசுரித்து, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை பேட்டி கண்டு, குண்டுவெடிப்பில் ஈடுபட்டோ ருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தைச் செய்து வருகின்றன.
இச்சூழலில் மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்புகளுக்கு காரணமாக இருந்த முஸ்லிம் பேரின அழிவு கலவரங்கள் குறித்தும் அதனை நடத்தியவர்கள் குறித்தும் அறிவது அவசியம். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு முற்றிலும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு முற்றுப் பெறாத நிலையில் இந்த வாரம் கோவை குண்டுவெடிப்பு குறித்து சில உண்மை களை மக்கள் மன்றத்தில் வைப்பது அவசியமாகிறது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அனைவரையும் கருணையின் அடிப்படையில் அவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கருதி விடுதலைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
சாதாரணமாக நீதிமன்றங்களில் கொலை வழக்குகள் நடைபெறும்போது, அதற்கான தண்டனைகளை நீதிபதி அளிக்கும்போது கொலைக்கான உள்நோக்கம் (ம்ர்ற்ண்ஸ்ங்) என்ன என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ அல்லது அதற்கு குறைவான தண்டனையோ அளிப்பார். அதேபோல் கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றம் குண்டு வெடிப்புகளுக்கான உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக அறிந்து தீர்ப்பளிக்க வேண்டும்.
குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள சிலர் மீது 153ஏ குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான முடிவு என்பது நமது கருத்து. குண்டு வைக்க துணிந்தவர்களின் நோக்கம் நவம்பர் டிசம்பர் கலவரத்திற்கு காரணமானவர்களை, அவர்களது தலைவர்களை தாக்க வேண்டுமென்பது தான். எனவே, இதனை மதமோதல் என்றோ, மதத்தினருக்கிடையே பகைமையை ஏற்படுத்தும் செயல் என்றோ கூற முடியாது.
பாபரி மஸ்ஜிதை இடித்து, முஸ்லிம்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டும் அத்வானி போன்றோர் அனைத்து ஹிந்துக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார்கள் என்றோ அல்லது அனைத்து ஹிந்துக்களும் தங்கள் தலைவர்களாக அவரை போன்றோரை கருதுகிறார்கள் என்றோ கருதுவது முட்டாள்தனமாகும்.
இவர்கள் இந்து மதத்தின் பெயரைப் பயன்படுத்தி உலாவரும் பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளின் தலைவரான அத்வானிக்கு ஹிந்து மதக் கோட்பாடு களின் மீது நம்பிக்கை கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே அத்வானி கோவை வருவதை கருத்தில் கொண்டு அவரையும் அவரது ஆதரவாளர்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். மதத்தினருக்கிடையே பகைமையே ஏற்படுத்தும் செயல் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
இனி நவம்பர் டிசம்பர் 97ல் நடைபெற்ற கலவரத்திற்கு செல்வோம்.
நவம்பர் 29, 1997 சனிக்கிழமை. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் டிசம்பர் 6 அன்று சென்னையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை முன்வைத்து பேரணி மற்றும் மாநாட்டிற்காக பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாக பிரச்சாரம் செய்துவந்த வேளையில் தான் அந்த செய்தி 39, இப்ராஹீம்ஜி சாஹிப் தெரு, இரண்டாம் சந்து என்ற முகவரியில் அப்போது இருந்த தமுமுகவின் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தது.
கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் படுகொலைச் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டில் உள்ள அல்உம்மா அலுவலகத்திற்கு காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்கு தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களை காவல்துறையிடம் ஒப்படைப்பதாக அல் உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்று முஸ்லிம் வாலிபர்கள் அப்பாஸ் (22), ஷபி (22) மற்றும் ஷபி (20) ஆகியோர் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
இத்துடன் பிரச்சனை முடிவடைந்து விட்டது என்பதுதான் அந்த செய்தி. ஆனால் இதற்கு பிறகு வந்த செய்திகள் நமது இதயங்களைப் பிளப்பதாக இருந்தது. காவலர் செல்வராஜ் படுகொலைக்கு பிறகு அன்று என்ன நடந்தது என்பது குறித்து தி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி பின்வருமாறு பதிவுச் செய்துள்ளார்:
''நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட (முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதை கடைகள் முதல் தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர் தான் தீ வைப்பு சம்பவங்களுக்கு தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில்: 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட சில காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்'' (ஆதாரம்: தீ வீக், 14 டிசம்பர் 97 இதழில் இ. விஜயலட்சுமி எழுதிய இங்ஹற் ஸ்ரீர்ய்ள்ற்ஹக்ஷப்ங்ள் கட்டுரை)
மறுநாள் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்கள் கோவை முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல தமிழகத்தில் வாழும் அனைத்து மனிதநேயர்களுக்கும் தலைக் குனிவை ஏற்படுத்திய நாள். கோவை தீப்பிடித்து பற்றி எரிந்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில்தான் நானும் நமது கழகத்தின் அன்றைய துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ்வும் நேரடியாக கோவைக்கு கிளம்பி னோம்.
கோவை கலவரத்தை காவல்துறையில் உள்ள சில கருப்பாடுகள் தலைமையேற்று நடத்தின. இவர்களுக்கு தலைமை தாங்கியவர் அன்றைய கோவை காவல்துறை தலைமையக துணை ஆணையாளர் இருந்த ஈ மாசானமுத்து.
ஆனால், காவல்துறையில் நல்ல நெஞ்சங்களும் உண்டு என்பதை பறைச்சாற்றும் நிகழ்வு நாங்கள் கோவைக்கு சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்டது. கோவை நகர எல்லைக்கு சற்று தூரத்தில் ஒரு காவல்துறைச் சாவடியில் நமது வாகனத்தை நிறுத்தி கோவைக்கு செல்லும் வழியை கேட்டோம். வழியைச் சொன்ன காவலர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களில் கோவையில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்விற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதை உணர்த்தியது.
அந்தக் காவலர் எங்களிடம்: ''உங்களையெல்லாம் பார்த்தால் நல்லவர்கள்போல் தெரிகின்றது. கோவையில் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். தயவு செய்து நீங்கள் கோவை செல்ல வேண்டாம். இந்தப் பாதையில் திரும்பி திருப்பூருக்கு செல்லுங்கள்'' என்று அந்தக் காவலர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இருப்பினும் நாம் கோவை நோக்கியே நமது பயணத்தைத் தொடர்ந்தோம். டிசம்பர் 2 அன்று காலை கோவை சென்று சேர்ந்தோம். அங்கு நாம் பார்த்தவை, கேட்டவை, அனுபவித்தவை இன்னும் ஆறாத தழும்புகளாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 அன்று கோவையில் என்ன நடந்தது. நாம் சொல்வதை நடுநிலையானதாக சிலர் கருதமாட்டார்கள். எனவே, கோவை முஸ்லிம் இன பேரழிவை பதிவு செய்துள்ள சில பத்திரிக்கையாளர்களின் கருத்துகளை இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.
பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழில் (டிசம்பர் 13லி26, 1997) அதன் சிறப்பு செய்தியாளர் டி.என். சுப்ரமணியன் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
''மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) அன்று வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்து காவலர்கள் மட்டுமில்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்பு பட்டைகளை அணிந்து திருச்சி சாலை லி டவுன் ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல்துறையினரின் மனைவி மார்களும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.
''உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதியில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கைய்ய கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைய்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடைவீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டன. கோவையில் மிகப் பிரபலமான முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான சோபா கிளாத் சென்டர் என்ற மூன்று மாடி கட்டிடம் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதில் அந்த கட்டிடம் தரைமட்டமாகியது. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகார கடைகள், காலணி கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை தெருவில் போட்டு தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
''காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் சி.டி. தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி. ரவி அங்கே வந்தபோது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்து தீவிரவாதிகள் அவர்களை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதலில் சி.டி. தண்டபாணிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன.
''காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு முஸ்லிம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர், அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹபிபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார் (அவர் நடுரோட்டில் தீக்கிரையாக்கப்பட்ட காட்சி தினமணி இதழில் வெளியானது). இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஒரு அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.''
தி வீக் இதழின் செய்தியாளர் விஜயலட்சுமி முஸ்லிம்களின் வீடுகள் எவ்வாறு தாக்கப்பட்டன என்பது குறித்து பின்வருமாறு வர்ணிக்கிறார்:
''வன்முறையாளர்கள் வீடுகளையும் விட்டு வைக்கவில்லை. பி1 காவல் நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள கனி ராவுத்தர் வீதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. பிளாஸ்டிக் மொத்த வியாபாரி ஒருவர் நம்மிடம் 'எனது மனைவி, ஆறு வயது, மூன்று வயது மற்றும் 6 மாதங்கள் கொண்ட எனது 3 குழந்தைகள் ஆகியோருடன் வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து எனது வீட்டை தீக்கிரையாக்கியது' என்றார்.' எங்களுக்குச் சொந்தமான கிட்டங்கியும் வியாபாரப் பொருட்களுடன் சேர்த்து எரிக்கப்பட்ட. 'எல்லா திசைகளில் இருந்தும் புகை வந்து கொண்டிருந்தது. நான் பி1 காவல் நிலையத்திற்கு மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்கள் கடைசிவரை வரவேயில்லை. இறுதியாக நான் என் குடும்பத்தினருடன் மேல் மாடிக்குச் சென்று பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் குதித்தோம். அப்போது எனது ஆறு மாத குழந்தை வாந்தி எடுத்துக் கொண்டிருந்தது. மற்ற குழந்தைகளுக்கு புகை மூட்டத்தினால் மூச்சுத் திணறியது' என்றார்.
''தனது ஆயுட்கால சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்யேக பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத்தலைவி அழுதுக் கொண்டே நம்மிடம் ''எனது கல்யாண பட்டுச்சேலை எரிந்துவிட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை'' என்றார். அருகில் உள்ள பி1 காவல் நிலையத்திற்கு தகவல் தந்த போதினும் அவர்கள் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்''
பிரபல பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நய்யார் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் 'ஆ ஸ்ரீர்ஞ் ண்ய் ற்ட்ங் ரட்ங்ங்ப்' என்ற தலைப்பில் 1998 ஜனவரி 3 அன்று எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
''நாடாளுமன்றத்தின் கவனத்திலிருந்து தப்பும் அளவிற்கு கோவை கலவரங்கள் லேசானது அல்ல. ராஜ்யசபையில் நடைபெற்ற விவாதங்கள் காயமடைந்த, அநாதரவாக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கலாம். நான் அந்த நகரத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்பு 200 கோடியைத் தாண்டும்.
இதனை ஹிந்துலிமுஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கரியத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. 'காவல்துறையினர், ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தை திட்டமிட்டு நடத்தினர்' என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது. ராஜ்யசபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இதனை தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு சிறிய பிரச்சனை அல்ல.
12 வயது பாலகன் அபுபக்கர் சித்தீக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரது தம்பி முஹம்மது ஆரிப் கர்ணகொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறக்க முடியாதவை.'
நமது வர்ணனையை விட தலைசிறந்த பத்திரிகையாளர் குல்திப் நய்யார் மற்றும் மதிப்புமிக்க பிரண்ட்லைன் மற்றும் தி வீக் செய்தியாளர்களின் வர்ணனை நடுநிலையாளர்களின் மனசாட்சியை உறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு மேற்கோள் காட்டுகிறோம்.
கோவையில் நவம்பர்லிடிசம்பர் 1997ல் நடந்த அராஜகங்களை அரங்கேற்றிய கயவர்கள் யாரும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படவில்லை. இந்த வன்முறைகளுக்காக கைது செய்யப்பட்ட அனைவரும் தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று கூறி குறுகிய காலத்தில் விடுதலைச் செய்யப்பட்டனர். இந்த கலவரங்களை முன் நின்று நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது அல்லது ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர்கள் மீது 120பி, 153 பிரிவுகள் நிரூபிக்கப்பட்டது என்று தீர்ப்பும் கூறப்படவில்லை.
செல்வராஜ் கொல்லப்பட்ட சூழலில் சதி ஆலோசனைகளை அளித்த ராமகோபாலன், அப்துன் நாசர் மஃதனியை போல் வருடக்கணக்கில் அல்ல, இந்த வன்முறைகளுக்காக ஒரு நாள் கூட சிறையில் தள்ளப்படவில்லை.
மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் எவ்வாறு கலவரத்தை தூண்டினார்கள், நடத்தினார்கள் வேடிக்கைப் பார்த்தார்கள் என்பதையெல்லாம் தரம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் வழியாக மேலே கண்டோம். இது சாதாரண முஸ்லிம்களின் உள்ளங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதை நடுநிலையாளர்கள் உணர வேண்டும்.
எனது தலைமையில் கோவை முஸ்லிம்கள் டிசம்பர் 3ம் தேதி கோவையில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களில் 17 பேரின் உடல்களை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று அதனை கோட்டைமேட்டிற்கு எடுத்து வந்து. இறுதி தொழுகையை நிறைவேற்றினோம். பிறகு அனைத்து உடல்களும் ஒன்று சேர ஊர்வலமாக கோவை சுண்ணாம்பு கால்வாய் அடக்கவிடத்தில் அடக்கப் பட்டது.
கோவை வரலாற்றில் இறுதி ஊர்வலங்களின்போது எப்போதும் கலவரம் ஏற்படுவது உண்டு. ஆனால், அமைதியாக அந்த ஊர்வலம் நடந்து முடிந்தது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் நான் உரையாற்றியபோது, ''நல்ல காவல்துறை அதிகாரிகள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். நமக்கு நீதி கிடைக்கும். வன்முறைக்கு வன்முறை பதில் ஆகாது. அமைதி காப்போம். நீதி கண்டிப்பாக கிட்டும்'' என்று குறிப்பிட்டேன்.
அன்றைய கோவை மாவட்ட கலெக்டர் சந்தானமும், ஊர்வல பாதுகாப்பிற்கு தலைமை தாங்கிய ஐ.ஜி. ஆர்.வி.கோபாலனும் எனது உரையை பாராட்டினார்கள். அத்துடன் நின்று விட்டார்கள். நீதி கிடைக்கவில்லை.
வன்முறையில் கிஞ்சிற்றும் நம்பிக்கை இல்லாத, ஒரு வன்செயலுக்கு இன்னொரு வன்செயல் தீர்வாகாது என்ற கொள்கையுடைய தமுமுக இந்திய வரலாற்றில் முதன் முறையாக கோவை கலவரத்தை வீடியோ ஆவணமாகப் பதிவு செய்தது. தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையத்திடம் நாம் அதனை டெல்லியில் நேரடியாக சமர்ப்பித்து நீதி கேட்டோம். நீதி கிடைக்கவில்லை.
இந்த பின்னணியில் தான் தனது சகோதரனை இழந்த, தனது உறவினரை இழந்த, தனது சமுதாயத்தினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதைக் கண்ட கோவை சகோதரர்களில் ஒரு சிலர் அவர்களுக்கு நீதி என்று தெரிந்த அநீதியான செயலில் பிப்ரவரி 14 அன்று ஈடுபட்டனர். உணர்ச்சிப் பெருக்கில், நீதி இல்லை இந்த நாட்டில் என்ற கோபதாபத்தில் ஏற்பட்டது தான் குண்டு வெடிப்புகள்.
சுமார் ஒன்பதரை ஆண்டுகள் கழித்து ஜூலை இறுதி வாரம் கோவை கலவரத்தில் கைதான சகோதரர்களில் பெரும்பகுதியினரை சிறையில் சந்தித்தபோது அவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிந்தது. தாங்கள் செய்தது பெரும் தவறு என்பதை உளப்பூர்வமாக அவர்கள் உணர்ந்துள்ளார்கள். தங்கள் நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பதை உணர முடிந்தது.
தி ஹிந்து நாளிதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஒன்பதரை ஆண்டுகள் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டதே அவர்களுக்கு பெரும் தண்டனையாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் அவர்களுக்கு சிறைவாசம் அளிப்பது பெரும் அநீதியாகத் தான் அமையும்.
நீதிபதி உத்திராபதி நீதி வழுவாமல் தனது இறுதித் தீர்ப்பை வழங்க இறைவனை பிரார்த்தனை செய்வோம்

Tuesday, August 7, 2007



Bush's Real Agenda in Palestine
By Ramzy Baroud
The Milli Gazette
30 July 2007
The Hamas government crackdown on Mohamed Dahlan's corrupt security forces and affiliated gangs in the Gaza Strip in June appears to mark a turning point in the Bush administration's foreign policy regarding Palestine and Israel. The supposed shift, however, is nothing but a continuation of Washington's efforts to stifle Palestinian democracy, to widen the chasm separating Hamas and Fatah, and to ensure the success of the Israeli project, which is focussed on colonising and annexing what remains of Palestinian land.It's vital that we keep this seemingly obvious reality at the forefront of any political discussion dealing with the conflict: the occupied Palestinian territories represent a mere 22 per cent of historic Palestine. Currently, Israel is on a quest to reduce this even further by officially conquering the West Bank and occupied East Jerusalem. Gaza is only relevant to this issue insofar as it represents a golden opportunity to divide Palestinians further, to confuse their national project and to present a grim picture of them as an unruly people who cannot be trusted as peace partners to the far more civilised and democratic Israelis.By prolonging Gazan strife, thus the Palestinian split, Israel will acquire the time required to consolidate its colonial project, and to further rationalise its unilateral policies vis-à-vis matters that should, naturally, be negotiated with the Palestinians.Moreover, one must not lose sight of the regional context. The Israeli lobby and its neo- conservative allies in the US administration and in the media are eager for a military showdown with Iran, which would weaken Syria's political standing in any future negotiation with Israel in regards to the occupied Golan Heights, and which would obliterate the military strength of Hizbullah, proven to be the toughest enemy Israel has ever faced in its decades-long conflict with the Arabs.Thus, its was of paramount importance for Hamas's "rise" to be linked directly to its relations with Iran; such ties, although greatly exaggerated, are now readily used as a rationale to explain Bush's seemingly historic move from backing Israel from a discreet distance (so as not to appear too involved) to initiating an international peace conference aimed solely at isolating Hamas, which would further weaken the Iranian camp in the Middle East.It also explains the abundant support offered by autocratic Arab regimes to Abbas, and Arab leaders' warnings about the rise of an Iranian menace. On the one hand, eliminating Hamas would send an unambiguous message to their own political Islamists; on the other, it's a message to Iran to back off from a conflict that has long been seen as exclusively Arab-Israeli. The irony is that to ensure the relevance of the Arab role in the conflict, some Arabs are making historic moves to normalise with Israel, and in return for nothing.Similarly, to ensure its own relevance, Abbas's Fatah is actively coordinating with Israel to destroy its formidable opponent, which represents the great majority of Palestinians in the occupied territories and arguably abroad. For this, assistance is required: money to ensure the loyalty of his followers, weapons to oppress his opponents, political validation to legitimise himself as a world leader, and new laws to de-legitimise the legal, democratic process that produced the Hamas victory of January 2006. In a conflict that is known for its agonisingly slow movement, nothing short of a miracle can explain how Abbas received all of these perks at an astronomical speed.The moment Abbas declared his arguably unconstitutional emergency government, the suffocating sanctions were lifted -- or more accurately, on the West Bank only. To ensure that no aid reaches anyone who defies his regime, Abbas's office revoked the licences of all NGOs operating in Palestine, making it necessary for them to submit new applications. Those loyal to Abbas are in. The rest are out.Weapons and military training have also arrived in abundance. Palestinians who have been denied the right to defend themselves, and for decades described as "terrorist", are suddenly the recipients of many caches of weapons coming from all directions. Israel announced a clemency to Fatah militants; the freedom fighters turned gangsters will no longer defend their people against Israeli brutality, but will be used as a militant arm ready to take on Hamas when the time comes.As for regional and international legitimacy, the Bush administration "decided" to change its policy to one of direct engagement, calling for an international Middle East peace conference. The conference will be about peace in name only, for it will not deal with any of the major grievances of the Palestinians that have fuelled the conflict for years, such as the problem of refugees, Jerusalem and the drawing of borders. Israel is of course willing to "concede" if these efforts will reframe the conflict as exclusively Palestinian, and as long as there is no objection to its illegal annexation of Palestinian land in the West Bank and Jerusalem.The reality is that there has been no change in American foreign policy regarding Palestine. The US, Israel and a few Arab regimes are pursuing the same old policy, which is merely being adjusted to fit the new political context.While Abbas and his men might bask in the many bonuses they are receiving in exchange for their role in destroying the Palestinian national project, the future will prove that Israel's "goodwill gestures", the support of the Israeli lobby in Washington, and the latter's generosity will not last. Abbas could as easily find himself a prisoner in the basement of his own presidential compound, just like his predecessor, if he dares assert the legitimate rights of his people, by far the ultimate losers in this shameless battle.Ramzy Baroud is a Palestinian-American author and editor of PalestineChronicle.com. His work has been published in numerous newspapers and journals worldwide, including the Washington Post, Al Ahram Weekly and Le Monde Diplomatique. His latest book is The Second Palestinian Intifada: A Chronicle of a People's Struggle (Pluto Press, London). Read more about him on his website: ramzybaroud.net
«
Latest Indian Muslim Islamic News
Latest Indian Muslim Organisation Press Releases / Statements
Subscribe to the PRINT edition NOW: Get the COMPLETE picture32 tabloid pages chock-full of news, views & analysis on the Muslim scene in India & abroad...Delivered at your doorstep, Twice a month

Friday, August 3, 2007

உ.பி.யில் ஒரு குஜராத் துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்


உ.பி.யில் ஒரு குஜராத்
துவம்சம் செய்யப்பட்ட முஸ்லிம் கிராமம்
சத்தியப்பிரியன்
சுதந்திர இந்தியாவில் நடக்காத ஒரு அக்கிரமம் உத்தரப்பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்துள்ளது.
கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளில் புகுந்து பாலியல் வன்முறைகள், வீடுகள் தீ வைப்பு, சூறையாடு தல் என அத்தனைக் கொடுமைகளும் ஒரு கிராமத்தினரின் மீது ஏவப் பட்டன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்தக் கொடுமைகளை பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரின் அடிப்பொடிகளும் இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் சரஸ்வதி மாவட்டத்தில் தானிதீ கிராமம். இங்கு 50 முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்றன. பண்டிட் திடுவதியின் 20 வயது மகள் வந்தனா. இவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே காதலித்த முஸ்லிம் வாலிபர் சலீமுடன் ஓடிவிட்டார்.
பிராமணர்களின் ரிமோட் கண்ட்ரோலில் நடப்பதாகக் கூறப்படும் மாயாவதி ஆட்சியில் நடந்த இந்தச் சம்பவம் அவர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
இந்த ஒரு சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த கிராம முஸ்லிம்கள் அனைவரையும் குற்றவாளிகளாய் ஆளும் வர்க்கத்தினர் சித்தரித்தனர். அதனால் பழிவாங்கும் நடவடிக்கை களைத் தொடங்கினர்.
மாயாவதி அமைச்சரவையில் ஆயுர்வேதத்துறை அமைச்சரான மிஸ்ராவின் சகோதரர் அசோக் மிஸ்ராவின் ரவுடிகள் ஆயிரக்கணக் கானோர் வாகனங்களில் அந்த குட்டிக் கிராமத்தை சூழ்ந்தனர். ஆறு மணி நேரம் அது மோடியின் குஜராத்தாக மாறிவிட்டது. முஸ்லிம்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. குடியிருப்புகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப் பட்டன. சிறுமிகளையும், இளம் பெண்களையும் அடித்து ஆடை களைக் களைந்து அவர்களை அவமானப்படுத்தியது மட்டுமல்லாமல் ஏளனமாக வும் சிரித்தனர். அதோடு அவமானத்தோடு ஓடி ஒளிந்த அந்த அபலைப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காயினர்.
காலை 10 மணிக்கு வந்த அவர்கள் வெறியாட்டம் ஆடித் தீர்த்துவிட்டுச் சென்றனர். தங்களது பெண் வந்தனா வந்து சேரவில்லை என்றால் கிராமத்தையே நிர்மூலமாக்குவோம் என்று எச்சரித்துள்ளனர். இவர்க ளோடு சில காவல்துறையினரும் வந்துள் ளனர். 13 முஸ்லிம் இளைஞர்களை இழுத்துச் சென்று காவல்துறையினர் லாக்கப்பில் அடைத்தனர்.
பாலியல் வன்முறைக்கு இலக்காக் கப்பட்ட பெண்களில் இருவர் 50 வயது மேற்பட்டவர்கள்.
காலை 9.30 மணிக்கு ஒருசில காவலர்கள் வந்து நோட்டமிட்டுச் சென்ற பிறகே இந்த அக்கிரமச் செயல் நிகழ்ந்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலை திட்டமிட்ட முக்கிய விஷமிகள் அசோக் மிஸ்ரா மற்றும் ஞானஷ்யாம்பதக் என்ற இருவரும் ஆவர். இவர்களது தாக்குதலில் யாருக்கும் தலையில் காயமோ, வெளிக்காயமோ ஏற்படவில்லை. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை. எனினும் மிகவும் மோசமாக தாக்கப்பட் டனர். கச்சிதமாக கடுமையான உள்காயங் கள் ஏற்படும் வண்ணம் அவர்களது தாக்குதல் அமைந்திருந்தது. சங்பரிவாரத் தினர் மட்டுமே இவ்வாறு தாக்குதல் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடூரமான இந்நிகழ்வை அச்சத்தின் காரணமாக கிராம மக்கள் மறைத்து விட்டனர். உண்மை அறிந்து அந்தப் பகுதி காங்கிரஸ் தலைவர் முஹம்மது அஸ்லம் ரைனி செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டினார். அதோடு காவல்துறை அலுவலகத்திற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தார்.
அரசியல் கட்சிகள் வரிசையாக போராட்டத்தை அறிவித்தன. தானிதீனி கிராமத்தின் முஸ்லிம்களில் அதிகம் பேர் இன்னும் மறைந்ததே வாழ்கின் றனர். கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிக்கிறது. மாற்றங்களை ஏற்படுத்து வதாக நினைத்து மாயாவதி சிக்கலில் மாட்டிக்கொண்டார்

ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்



ஆந்திராவில் இரண்டு ஹனீஃப்கள்
முஹம்மத் ஹனீஃபுக்கு தீவிரவாத பழி சுமத்தி திருதிருவென விழித்து திக்கு முக்காடி தவித்த ஆஸ்திரேலியாவைப் பற்றி தற்போது பரபரப்பாக பேசப் படுகிறது. ஆனால் டாக்டர் ஹனீஃபை விட பல மடங்கு வேதனையையும் துன்பங்களையும் அனுபவித்த இளைஞர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
2001 செப்டம்பர் 11ல் நிகழ்ந்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பாக இரண்டு இந்திய இளைஞர்களை குறிப்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை அமெரிக்க அரசு முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
முஹம்மது அய்யூப், ஜாவித் அஹ்மத் இருவரையும் இரட்டைக் கோபுர தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்கள் என பல ஆண்டுகளாக சிறையி லடைத்தது.
கடந்த ஆண்டு இருவரையும் அமெரிக்க அரசு விடுதலை செய்தது. இவர்கள் இருவர் மீதான தீவிரவாத தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்ப தால் அவர்கள் விடுதலை செய்யப் பட்டனர்.
முஹம்மத் ஹனீஃப், அவரது மனைவி ஃபிர்தவ்ஸ் அர்ஷியா மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உணர்வுகளை எங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நாங்களும் அதைப் போன்ற ஒரு துன்பத்தை அனுபவித்த வர்கள் என்று ஜாவீத் அஸ்மத்தும் அவரது மனைவி தஸ்லீமும் கூறுகின் றனர்.
முஹம்மத் ஹனீஃப் என்ற கர்நாடக சகோதரருக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்தது தான் அமெரிக்காவில் எனக்கும் நடந்தது என்று குறிப்பிடும் ஜாவித் அஸ்மத், நான் உலக வர்த்தக வளாகத்தை தாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவன் என என்னைக் கைது செய்தார்கள். நான் சவூதி அரேபியாவின் பிரஜை என்றார் கள். அதற்கு போலியாக பாஸ்போர்டும், பிறப்புச் சான்றிதழும் புனைந்தார்கள். எனக்கு விமானம் ஓட்டத் தெரியும் என்று பொய்யாக ஒரு ஆவணத்தை தயார் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவெனில் எனக்கு விமானம் ஓட்டத் தெரியாது. எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் எதையும் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்க முடிய வில்லை. வழக்கை இழுத்தடிக்கும் மிகக் கேவலமான தந்திரத்தை கையாண்டார் கள். இறுதியில் நீதிமன்றத்தால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம்.
ஹனீஃபுக்கு ஆதரவாக இந்திய அரசு களம் இறங்கியது. ஹனீஃப் குறித்த அனைத்து வி'யங்களும் பகிரங்கப் படுத்தன. அதனால் புனையப்பட்ட கற்பனை குற்றச்சாட்டுகள் மறைந்து உண்மைகள் வெளிவரத் துவங்கின என்று கூறிய ஜாவீத் இதற்கென இந்திய அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
தங்களை சிறையில் தள்ளியதற்கும் கண்ணியக் குறைவை ஏற்படுத்தியதற்கும் இழப்பீடு கோரி அமெரிக்க அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் ஜாவீத் அஸ்மத் விரைவில் வெற்றி கிடைக்கும் என்றும் நம்புகிறார்

Saturday, July 28, 2007


குடியரசு துணைத் தலைவராகிறார் கல்வியாளர் ஹமீத் அன்சாரி
அபூசாலிஹ்


இந்தியாவின் புதிய குடியரசு துணைத்தலை வராகும் வாய்ப்பு கல்வியாள ரும், மனித உரிமை ஆர்வல ருமான முஹம்மத் ஹமீத் அன்சாரிக்கு வாய்த்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி அணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் எம்.ஹெச். அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வருபவர்.
இவரது பெயரை 20.07.2007 அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவி சோனியா காந்தி முறைப்படி அறிவித்தார்.
இவர் ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் ஈரான், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடு களில் தூதராக பணியாற்றி உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினராகவும் பணியாற்றிய எம்.ஹெச். அன்சாரி சிறந்த கல்விமான் ஆவார்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடமை யாற்றியவர். 1984 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.
வளைகுடா நாடுகளின் அரசியல் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்த அன்சாரி, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மனப்பாங்கு கொண்டவர்.
முன்னணி ஆங்கில நாளேடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனின் ஆக்கிரமிப்பு கொள்கை களை சரமாரியாக விளாசித் தள்ளியவர்.
சிறந்த நூல்களை படைத்த அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய போது மனித உரிமைகளை பேணுவதில் பேரார்வம் கொண்டவராக விளங்கினார்.
குஜராத் கோர கலவரத்தில் குதறப் பட்ட மக்களின் பால் அன்பு காட்டிய அன்சாரி 1984ல் நிகழ்ந்த சீக்கியர் எதிர்ப்பு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே இழப்பீடு வழங்க வேண்டும் என வாதாடினார்.
கல்வியாளர், மனித உரிமை ஆர்வலர் என பல்வேறு சிறப்புகளை உடைய அன்சாரியை குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவித் ததின் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தல் வேட் பாளர் அறிவிப்பில் காங்கி ரஸ் கூட்டணி செய்த குளறுபடிகளை சரி செய்து விட்டதாகத் தெரிகிறது.
மக்களின் குடியரசுத் தலைவராக புகழப்பட்ட அவுல் பக்கீர் ஜெயினுலாப் தீன் அப்துல் கலாம் தமது பொறுப்பிலிருந்து விடை பெறும் நேரத்தில், இஸ்லா மிய சமுதாயத்தை சேர்ந்த மற்றொரு மக்கள் அறிஞர் குடியரசுத் துணைத் தலைவ ராக அறிவிக்கப்பட இருப் பது ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மூன்றாவது அணியின் சார்பில் ரசீத் மசூத் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டி ருக்கிறார். பாஜக அணியின் சார்பில் மவ்லானா அபுல் கலாம் ஆசாத்தின் பேத்தியும் முன்னாள் ராஜ்ய சபைத் துணைத் தலைவருமான டாக்டர். நஜ்மா ஹெப்துல்லாஹ் போட்டியிடுகிறார்.
இந்திய விடுதலைப் போராட்ட பாரம்பரியத்தில் பிறந்தவர்கள். நஜ்மா ஹெப்துல்லாஹ் ஹமித் அன்சாரி இருவரும் ஆவார். காங்கிரஸின் செல்வாக்கு மிகுந்தவராய் திகழ்ந்த நஜ்மா இடையில் ஆட்சியில் அமர்ந்த பாஜகவின் வலையில் வீழ்ந்தார்.
ஊசலாட்ட மனநிலையில் உள்ள நஜ்மா தனது அரசியல் வாழ்வின் முதிர்நிலையை இழந்தார்.
இடைக்கட்ட காலத்தில் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவியிராவிட்டால் இன்று இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக ஏகோபித்த ஆதரவுடன் பதவி ஏற்றிருக்கக் கூடும். கொடுக்க வேண்டிய கடனை கொடுக்க மனமில்லாதவன் வழிப்பறிக் கொள்ளை யன் கொள்ளையடிக்க வரும் போது தான் கொடுக்க வேண்டிய கடனை தனக்கு முன்பு உதவியவருக்கு இதோ உனக்கு சேர வேண்டிய கடனை கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி விடுவதைப் போல ஜெயிக்கவே முடியாத ஒரு பதவிக்கு பாஜகவினர் முஸ்லிம் ஒருவரை நிறுத்தி இருப்பது ஒரு தேர்ந்த நகைச்சுவை காட்சியாக பார்க்கப்படுகிறது.
மொத்ததில் குடியரசுத் தலைவர் தேர்தலில் கோட்டை விட்ட அரசியல் சாதுர்யத்தை துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸும் இடதுசாரிகளும் மீட்டுவிட்டனர்.
அறிஞரும் கல்வியாளரும் ஹமீத் அன்சாரி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னைக்கு ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணைத் தலைவராக விஜயம் செய்தார். அப்போது ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் மற்றும் சச்சார் குழு பரிந்துரைகளை விரைவில் நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுத்தது.
சமீபகால பள்ளிவாசல்களில் மீதான குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்து சிறுபான்மை நேரடியாக தலையிட்டு துல்லிய விசாரணைகளை மேற்க் கொள்ள வேண்டும் என்றும் தமுமுக வேண்டுகோள் விடுத்தது. அதைக் கனிவோடு செவிமடுத்த அன்சாரி தற்போது குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார். கல்வியாளர், மனித உரிமையாளர் அன்சாரியை பாராட்டி வரவேற்கிற்கிறோம்

Thursday, July 19, 2007

அப்பாவிகளின் ரத்தத்தால் சிவந்த சிவப்பு மஸ்ஜித்



பாகிஸ்தானின் புகழ்பெற்ற லால் மஸ்ஜிதில் பாகிஸ்தானின் ராணுவம் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர்
. அதில் பெரும்பாலானோர் அப்பாவி மதரஸா மாணவர்கள் மற்றும் மாணவிகள். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இதயப் பகுதியில் அமைந்துள்ளது லால் மஸ்ஜித்.
இந்த சிவப்பு பள்ளிவாசல் வளாகத்தில் ஜாமியா ஹஃப்ஸா என்ற பெண்கள் மதரஸாவும், ஜாமியா ஃபரிதிய்யா என்ற ஆண்கள் படிக்கும் மதரஸாவும் செயல்பட்டு வருகிறது.


இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே 'லால் மஸ்ஜித்' முதல் பக்க செய்தியானது. மார்ச் மாதம் 27ல் விபச்சார விடுதியில் தேடுதல் வேட்டையை நடத்தி குற்றவாளிகளை சிறைப்பிடித்தது.
மார்ச் 28ல் இதைத் தட்டிக் கேட்ட மதரஸா மாணவிகளை சிறைப் பிடித்ததற்கு பதிலடியாக, மூன்று காவல்துறையினரை மதரஸா மாணவிகள் சிறைப்பிடித்தனர்.மார்ச் 30ல் ஆபாச சி.டி.க்களை விற்பனை செய்துவரும் கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
ஏப்ரல் 6ல் லால் மஸ்ஜிதில் ஷரீஅத் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
ஏப்ரல் 9ம் தேதி ஷரீஅத் நீதிமன்றத்தில் முதன்முதலாக ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது. கிளைடர் விமானத்தில் பறந்த அமைச்சர் நிலோஃபர் பக்தியார் ஆபாச உடை உடுத்தியதற்காக அவர் மீது ஃபத்வா பிரயோகிக்கப்பட்டது.
மே 19ம் தேதி மதரஸா மாணவர்களை கைது செய்ததற்காக நான்கு காவல்துறையினரை மதரஸா மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.
ஜூன் 23ம் தேதி அக்குபஞ்சர் மருத்துவமனை என்ற பெயரில் விபச்சார விடுதி நடத்தியதாக குற்றம்சாட்டி சீனாவைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 9 பேர் கடத்தப்பட்டனர். அத்தோடு சீன அரசின் கடும் ஆட்சேபனை பாகிஸ்தான் அதிபரிடம் தெரிவிக்கப் பட்டது.

இதனிடையில் அரசுக் கும் லால் மஸ்ஜிதுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடை வதைத் தடுக்க இருதரப் பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சவுத்ரி சுஜாத் ஹுஸைன் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் இருவரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. ஜூன் முதல் வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புனித மக்கா ஹரம் ஷரீஃபின் இமாம் சுதைஷ் முயற்சி மேற்கொண்டு நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையில் சீனப் பெண்களைக் கடத்திய சம்பவத்தால் இருதரப்புக்கும் இடையிலான தொடர்பு மோசமானது.
ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து 1,250 மாணவர்கள் சரணடைந்தனர்.
'ஆபரேஷன் சைலன்ஸ்' ஆரம்ப மானது. முதலில் ராணுவத்தை எதிர்த்து மாணவர்கள் தாக்குப் பிடித்தனர். ராணுவ துணைத் தளபதி உள்பட 10 கமாண்டோக்கள் பலியாயினர்.
லால் மஸ்ஜிதின் மீது தாக்குதல் நடத்தினால், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மதரஸா மாணவர்கள் தங்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதிப்பார் கள் என தப்புக் கணக்கு போட்டனர் அப்துல் அஜீசும் அப்துல் ரஷீதும். தேவ்பந்த் (5,400 மாணவர்கள்) பர்லவியில் (3000 மாணவர்கள் லி 46 மதரஸாக்கள்) அஹ்லே ஹதீத் (200 மாணவர்கள் லி 2 மதரஸாக்கள்) எட்டு ஷியா மதரஸாக் களில் 700 மாணவர்கள் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் ரபிதா அல் மதரஸா (இதில் 18 மதரஸாக்களில் உள்ள 1500 மாணவர்களும்) இவர்கள் அனை வரும் தங்களுக்காக போராட்டத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்த்து ஏமாந்தனர்.
கடைசியில் மாணவிகளோடு மறைந்து பர்தா அணிந்து தப்பிக்க முயன்ற அப்துல் அஜீஸ் கைது செய்யப்பட்டார்.
இறுதிவரை போராடி இளையவர் அப்துல் ரஷீத் மரணமடைந்தார். அப்துல் ரஷீத், அப்துல் அஜீஸ் சகோதரர்களின் 80 வயது தாயாரும் மரணமடைந்தார்.
இதில் அப்துல் ரஷீத், ராணுவ தாக்குதலில் பலியான நேரத்தில், அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவரது மனைவி ஹுமைரா தனது சகோதரன் வீட்டில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
நூற்றுக்கும் குறைந்த அளவே ராணுவ நடவடிக்கையில் பலியானதாக அரசு தெரிவித்தது. ஆனால் அதே அரசு 400 கஃபன்களை (சவத்துணி) தயாரிக்குமாறு அப்துல் சத்தார் எத்ஹி பவுன்டேஷன் எனும் தன்னார்வ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அப்துல் சத்தார் ஊடகங் களிலும் உண்மையை போட்டுடைத்தார்.
ஏராளமான அப்பாவிகளின் உயிரைக் குடிக்கும் அளவு நிலைமையை முற்றவிட்ட லால் மஸ்ஜித் நிர்வாகத்தின் இந்த முதிர்ச்சியற்ற வெறி நடவடிக்கை அனைத்து மார்க்க பெரியவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்டது.
வன்முறைகளாலும் கட்டாயப்படுத்து தலாலும் மிரட்டலினாலும் 'நல்ல குறிக்கோள்களே' ஆனாலும் அது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அநேகமாக இந்த 21ஆம் நூற்றாண்டில் சொந்த மக்களைக் கொன்ற ஒரே நாட்டின் அதிபர் முஷாரப் மட்டுமே என நடுநிலையாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் அரசு நிலைமையை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் முயற்சி செய்யாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்டது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
சீன அதிபரும், அமெரிக்க நிர்வாகமும் திருப்தியடைந்தால் போதும் என்ற அளவில் செயல்பட்ட முஷாரப், முழுமையான ஆதரவை அரசியல் கட்சிகளிடம் பெற்று விட்டாலும், உலக அளவில் தனது கவுரவத்தை சற்றுக் குறைத்துக் கொண்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
பாகிஸ்தான் இன்று முஷாரப் எதிர்ப்புணர்வால் தகித்துக் கொண்டிருக் கிறது. மேற்குலகில் முஷாரப் தனது நடவடிக்கைகளுக்காக பாராட்டப் படுகிறார். நூற்றுக்கணக்கான அப்பாவி களின் உயிர்களுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்

Sunday, July 15, 2007

டாக்டர் ஹனீஃபை விடுவிக்க ஆஸ்திரேலியா மறுப்பு!

டாக்டர் ஹனீஃபை விடுவிக்க ஆஸ்திரேலியா மறுப்பு
!14 நாட்களுக்குப் பிறகு திடிர் குற்றச்சாட்டை சுமத்தியது. அவரை எதிர்பார்த்து மனைவியும் பெற்றோரும் ஏமாற்றம்
.இது ஒரு நாடகம் என ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சி.ஜே.ராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் கிளாஸ்கோவில் நிகழ்ந்த வாகன குண்டு வெடிப்பு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிடிக்கப்பட்டு விசாரிக்கப் பட்டு வரும் ஹனீஃப் மீது ஆரம்பம் முதலே எவ்வித குற்றச்சாட்டும் இல்லை. சம்பிரதாயப் பூர்வமான விசாரணை மட்டுமே இது என ஆஸ்திரேலிய நிர்வாகம் நேற்று அதிகாலை வரை அறிவித்து வந்தது.
ஆஸ்திரேலியக் காவல்துறையின் சாதாரண அதிகாரி முதல் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டு வரை ஹனீஃப் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்று கூறினர். பெங்களூர் காவல்துறையும் ஹனீஃபின் வீட்டில் எந்த தடயமும் கிடைக்க வில்லை என்று ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத் தக்கது.
பத்திரிகைகளில் ஹனீஃப் இன்று விடுவிக்கப் படுவர். நாளை விடுவிக்கப்படுவார் என ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை சனிக்கிழமை (14.07.07) முஹம்மது ஹனீஃப் மீது திடீரென குற்றச்சாட்டு ஒன்றை ஆஸ்திரேலியக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கஃபிலின் சகோதரர் சபீலுக்கு சிம் கார்டு கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமென ஆஸ்திரேலியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் சி.ஜே.ராவ் தெரிவித்திருக்கிறார்.
திறமை வாய்ந்த குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரை அமர்த்தினால் ஹனீஃபை காப்பாற்றும் வாய்ப்பு உள்ளது என்றும் சி.ஜே. ராவ் தெரிவித்துள்ளார்.
27 வயதான ஹனீஃப் அண்மையில் தனக்கு பிறந்த பெண் குழந்தையை முதன் முதலாக தற்போது தான் பார்க்கப் போகிறார் என ஏக்கத்துடன் காத்திருந்த அவரது மனைவி பிர்தவ்ஸ் அர்ஷியா சோகத்தில் மூழ்கினார். ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும் என்றார். சிம் கார்டு ஒருவருக்கு கொடுப்பதாலே யாரும் குற்றவாளியாக மாட்டார்கள் என்றும் ஃபிர்தவ்ஸ் அர்ஷியா தெரிவித்தார்.
சர்வதேச பொது மன்னிப்புச் சபை ஹனீஃபை விடுவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
கஃபில் மட்டுமே சம்பவத்துக்கு தொடர்புடையவர் ஹனீஃபுக்கு எந்த தொடர்பும் இல்லை என இந்திய புலனாய்வுத் துறை ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

Wednesday, July 11, 2007

தூய உள்ளங்களுக்கு ஓர் ஒத்தடம்


200பேரை ப்லி கொண்ட அந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து இன்று ஓராண்டு ஆகிவிட்டது.ஈடு செய்யமுடியாத இழப்பினை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் கூறும் மனோதிடம் யாருக்கும் இல்லை எனினும் அவர்களின் ஆறுதலுக்காகவும் மனநிம்மதிக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.கொடுமையான அந்த நிகழ்வுக்குப்பிறகு ஏராளமான அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை வளைத்துப்பிடித்து சிறைகொட்டடிகளில் அடைக்கப்பட்ட மனித உரிமை மீறலை மன்னிக்கவே முடியாது.ஆனால் அதே வேளையில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது வெறுப்புனர்வை புல்லுருவிகள் எங்கும் பரப்பிய நேரத்திலும் கூட தங்கள் உயிரை துச்சமாக எண்ணிஉயிர் காக்க விரைந்த அந்த தியாக உள்ளங்களை மறக்கமுடியுமா?அந்த தூய உள்ளங்களை பாராட்டும் விதமாக அவர்கள் இதயங்களுக்கு ஒத்தடம் போடும் வகையில் இந்த செய்திக்கட்டுரையை வெளியிடுவதில் பெருமிதம்கொள்கிறோம்..மும்பை: பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முஸ்லிம்கள்!அபூசாலிஹ்இந்தியாவின் 'நியூயார்க்' என அழைக்கப்படும் மும்பையில் ஜூலை 11ஆம் தேதி பதற வைக்கும் பயங்கர தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. உழைத்து களைத்து மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் பரபரப்பான மாலை நேரத்தில் போர்வில்லி, ஜோகேஸ்வரி, பாந்த்ரா, மாதுங்கா உள்ளிட்ட ஏழு புறநகர் ரயில் நிலைய மின்சார ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாக தகவல் கள் பரவின. 200க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட ஏறக்குறைய 700 பேருக்கு மேல் படுகாயம் அடைந்த இந்தக் கோர நிகழ்வில் தன்னலம் கருதாது சேவைகளாற்றிய கருணை உள்ளங்களைப் பற்றி தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.காவல்துறைக்கு முன்பாகவே களத்தில்...ஃபயாஸ் என்ற 30 வயது இளைஞர் தனது வீடு இருக்கும் நவ்படா பகுதியை நோக்கி மேம்பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். இதயத்தை அதிர வைக்கும் சத்தம் ரயில் பாதையில் கேட்டது. ரயில் வரும் திசை நோக்கி ஃபயாஸ் ஓடினார். ஏதோவொரு பெட்டியிலிருந்து கறும்புகை வந்து கொண்டிருக்கிறது. ரயில் நகர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மனிதர்கள் வெளியே விழுந்து கொண்டே இருக்கிறார்கள். பிணமாகவும், குற்று யிராகவும் அருகிலுள்ள பாலத்தை அடைந்தபோது ரயில் தானாகவே நின்றுவிட்டது. குண்டுவெடிப்பினால் ரயில் பெட்டியின் துண்டுகள் 80லிருந்து 100 மீட்டர்கள் வரை சிதறி இருக்கின்றன.இதயத்தைக் கிழித்துப் போடும் கூக்குரலைக் கேட்ட ஃபயாஸ், உதவிக்கு ஆட்களை அழைத்துவர ஓடினார். நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் மீட்புப் பணிகளில் இறங்கினர்.கோர நிகழ்வு நிகழ்ந்து நெடுநேரம் ஆகியும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும் வரவில்லை, ரயில்வே அதிகாரிகளும் வரவில்லை. நாங்கள் செல்லத் தேவையில்லை, நீங்கள் முதலில் செல்ல வேண்டும் என்று இரண்டு துறையினருக்கும் குடுமிபிடிச் சண்டைகள் நடந்த தகவல் பின்னர் தெரிய வந்தது. ரயில்வே எல்லைக்குள் பொது காவல் துறையிருக்கு அதிகாரம் இல்லை என்பதும் ஒரு காரணம்.பாதிக்கப்பட்டவர்களை மீட்க மிகவும் சிரமப்பட வேண்டி இருந்ததாக சொலன்கர் கூறுகிறார். இவரைப் போன்ற இளைஞர்கள் 'அல்லிஹிந்த் ஏக்தா சொஸைட்டி' ஒருங்கிணைத்தது.பல உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. சில மட்டுமே எளிதில் அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தன. சில உடல்கள் திகிலூட்டும் வண்ணம் இருந்தன. தாமதமாக வந்த காவல்துறையினர், நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததாக சொலன்கர் குறிப்பிடுகிறார்.பிணங்களையோ, படுகாயமுற்றவர்களையோ அவர்கள் தொட்டுத் தூக்க முயற் சிக்கக் கூட இல்லையாம். கைகளை இழந்த மக்கள், தோள்பட்டை நசுங்கிய வர்கள், மற்றும் உறுப்புகள் இடுக்குகளில் சிக்கி வேதனை பொறுக்க இயலாமல் கதறியவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டிய மிகக்கடினமான பணி இந்த இளைஞர்களுக்கு. பாதிக்கப்பட்டோரை உடைந்த ரயில் பெட்டி யில் இருந்து மீட்கும்போது மிகுந்த உடல் சிரமமும் சமயோகிதமும் தேவைப் பட்டது. ரயில் நிலையத்தில் இரண்டு ஸ்ட்ரெச்சர் மட்டுமே இருந்தன. படுகாயம் அடைந்த வர்களையும், பலியானவர்களையும் போர்வைகளில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டிய நிலை.படுகாயம் அடைந்தவர்களை தூக்கிச் செல்லும்போது தோள் பட்டைகள் வலியெடுக்க ஆரம்பித்ததால் அடுத்து பாதிக்கப்பட்டவர்களைத் தூக்குவதற்கு முன் நொறுங்கிக் கிடந்த முதல் வகுப்பு பெட்டியிலிருந்த இருக்கைகளை முழு பலத்தையும் பிரயோகித்து எடுத்து அந்த இருக்கைகளின் மீது பாதிக்கப்பட்டவர் களும், படுகாயம் அடைந்தவர்களும் வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.முஸ்லிம் சேவைப் படையினர் சுற்றுப்புறங்களில் கிடந்த மொபைல் போன்களையும், உடைமைகளையும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து, அதை முறைப்படி அறிவிக்கவும் செய்தனர்.குண்டு வெடித்தபோது பாந்த்ரா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள கரிப் நகர மக்கள் கேஸ் சிலிண்டர் வெடித்ததாக நினைத்திருந்தனர். ஆனால் சலீம் குரைஷி என்ற காங்கிரஸ் பிரமுகர் மட்டும் தனது வீடியோ கேமராவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஏதோ விபரீதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உள் மனது கூறியதாம். நில அதிர்வும் கரும்புகையும் நடந்தது குண்டுவெடிப்புதான் என்பதை உணர்த்தவே, தனது வீடியோ காமிராவில் நடப்பதைப் பதிவு செய்யத் தொடங்கி யுள்ளார். இறந்த உடல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.காயம் அடைந்தவர்களில் பெரும் பாலோரின் நிலை மிகவும் அபாயக் கட்டத்தில் இருந்ததையும் அது காட்டியது. சில உடல்கள் தலைகள் இல்லாமல் கிடந்தன. சலீம் குரைஷியின் வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டன. பல மீட்புப் பணிகள் பதிவாகி உள்ளன. அஸ்லம் என்ற ரிக்ஷாகாரர் உடல்களை அடுக்கி நகர்த்த முடியாமல் கிட்டத்தட்ட தவழ்ந்து செல்வதைப் போல தனது ரிக்ஷா வாகனத்தில் உடல்களைக் கொண்டு சென்றதையும் அந்த படப்பதிவு காட்டியது.மருத்துவமனை நோக்கி...ஜோகேஸ்வரி ரயில் நிலையத்துக்கு வெளியே தையற்கடை வைத்திருக்கும் அக்தர் ஹுஸைன், குண்டுவெடித்த சப்தத்தைக் கேட்டவுடன் நண்பர்களை அழைத்துக் கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மீட்புப் பணிக்கு வசதியாக மதில் சுவரின் ஒரு பகுதியை இடித்த பின்பு அவர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். தங்கள் தோள்களில் காயம்பட்டோரையும், பலியானோரையும் சுமக்க ஆரம்பித் தனர்.13 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜோகேஸ்வரி பகுதியில் இருந்த முஸ்லிம்கள் பலர் இருப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டனர். இன்றுவரை அந்தக் காட்சி என் முன்பே நிழலாடியது. ஆனால் இப்போது அது மறைந்து என் ஹிந்து சகோதரர்களை காப்பாற்றுவதே என் முன் உள்ள ஒரே குறிக்கோளாக இருந்தது என்கிறார் அக்தர் ஹுஸைன்.மீட்புப் பணிகளுக்கு மேலும் ஆட்கள் தேவையாக இருக்கவே முமீன் காலனி மற்றும் ஹாஜுர்வாடி பகுதியிலுள்ள இளைஞர்களும் அழைக்கப்பட்டனர். ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கவும் உதவிகளும் வரத் தொடங்கின.முமீன் காலனி முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிறிய மெத்தை கள், மற்றும் போர்வைகள் எடுத்து வந்தனர். அந்த மெத்தைகளும், போர்வைகளும் இறந்தவர்களை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்டன. இந்த சேவையில் 65 வயது முதியவரான அக்தரின் தந்தையும் பங்கேற்றார்.மருத்துவமனைகளில் காத்திருந்த அதிர்ச்சிபாதிக்கப்பட்டவர்களையும், பலியானவர்களையும் சுமந்து சென்ற கருணை உள்ளங்கள் மேலும் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நாடே பதறிய மும்பை மாநகரே கதறிய அந்தக் கொடிய சம்பவத்தைக் கண்ட பிறகும் தனியார் மருத்துவமனை கள், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது. இளைஞர்களுக்கு ஆத்திரம் பீறிட்டது, எனினும் அடக்கிக் கொண்டனர். இதில் சில மருத்துவ மனைகள் கதவுகளை அடைத்துக் கொண்டன (என்னே மனிதாபிமானம்?)படுகாயம் அடைந்தவர்களையும், பலியானவர்களின் உடல்களையும் சுமந்து கொண்டு கூப்பர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.ரத்த தானம் செய்வதிலும் முன்னின்ற முஸ்லிம் இளைஞர்கள்சித்தார்த் மருத்துவமனையின் ரத்த வங்கியில் முண்டியடித்துக் கொண்டி ருக்கும் ஒரு முஸ்லிம் இளைஞர் கூட்டம்.இந்த ரத்தம் ஒரு உயிரைக் காக்கப் பயன்படும் என்றால் எனக்கு மகிழ்ச்சியே என்கிறார் அப்துல் கான். இதை ராய்ட்டர் செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.சிலர் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் தோற்றுக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் முக்கியஸ்தர் பாஷா மியான் ஷேக்.மக்களைப் பிரிக்கும் கொள்கையாளர்கள் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முன்னணி முஸ்லிம் பிரமுகர் மவ்லானா ஜலாலுத்தீன் உமரி.குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மும்பை மாநகரில் பிரபல இஸ்லாமியா அராபியா பள்ளிவாசலின் கதவுகள் நாள் முழுவதும் திறந்திருந்தன. காயம் அடைந்தவர்களுக்கு உறைவிடம், உணவு, குடிநீர், அவசர மருத்துவ வசதிக்கான பணியில் மும்பை இஸ்லாமிய அராபியா பள்ளிவாசல் சேவை சின்னமாக பாராட்டப் பெற்றது.ரத்தம் வழங்கிய முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்களின் கண்ணீரால் நன்றி செலுத் தினர் ஹிந்து சமுதாய மக்கள்.இது மும்பையின் நிஜ முகம். இனி இதை யாராலும் வெல்ல முடியாது என்று கூறுகிறார் குண்டு வெடிப்பில் காயம் அடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் லதா சிரிஷா என்ற ஹிந்து சகோதரி.குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்களை நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ வேதனைப்படுத்தும் வண்ணமே செய்திகளை வெளியிடுகின்றன.அவர்களுக்கெல்லாம் 'சகோதரத்துவ' பாடங்களை வழங்கும் வண்ணம் முஸ்லிம் இளைஞர்களின் சேவை அமைந்திருக்கிறது.நவ்படா, கரிப் நகர், பெஹ்ராம்படா போன்ற பகுதிகள் 1992லி93ல் சிவசேனையினர் நிகழ்த்திய வெறியாட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் உடமைகளை இழந்தனர். உறைவிடங்களையும் இழந்தனர். அப்போது நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்ற அவர்கள் தற்போது தேசத்தின் ஒட்டுமொத்த கண்ணியத்தையும் பெற்று விட்டார்கள்.குண்டு வெடிப்பினைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், இந்தியாவை எவராலும் மண்டியிட வைக்க முடியாது என்றார்.உண்மைதான். ஃபயாஸ் போன்ற வர்களும், அக்தர் ஹுஸைன் போன்ற வர்களும் இருக்கும்வரை இந்திய மக்களின் ஒற்றுமையை எவனும் குலைக்க முடியாது.பதவி சுகத்திற்காக மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் உள்நாட்டு பயங்கர வாதிகளும், அன்னிய நாட்டின் ஒத்துழைப்போடு சதிச்செயல் புரியும் வெளிநாட்டு பயங்கரவாதிகளும் தோல்வியைத் தழுவுவது திண்ணம்

Friday, July 6, 2007

முதல் இந்திய சுதந்திரப் போர்1857;


முதல் இந்திய சுதந்திரப் போர்1857;
வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட்ட மாவீரர்கள்
அபூசாலிஹ்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த முஸ்லிம்களின் தியாகம், வரலாற்றின் நெடிய பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
பகதூர்ஷா ஜாஃபரும், சிராஜுத் தவ்லாவும், மைசூர் வேங்கை ஹைதர் அலியும், அவரது மகன் வீரத் திப்புவும், கரிய மனம் கொண்ட கயவர் களாலும் மறைக்க முடியாத அளவு மக்களின் மனதில் நிலை நிறுத்தப்பட்டதால் வரலாற்றின் பக்கங்களில் இந்த வீரக் கதாநாயகர் களின் வாழ்வு வெளிச் சத்துக்கு வந்தது. இந்த வெளிச்சத்தின் ஒளிச் சத்து பரவி இன்றும் இந்தியத் தலைமுறை யினரின் நாடி நரம்பு களை முறுக்கேற்றி நாட்டுப் பற்றும் வீர உணர்வும் பெருக் கெடுத்து ஓடச் செய்து வருகிறது. மறைக்கப்பட்ட மாவீரர்களின் உயிர்த் தியாகம் பாடநூல்களிலும் வரலாற்று ஆய்வுகளிலும் வெளிவந்தால் இந்திய மக்களின் மனதில் புதிய உத்வேகமும் வீர உணர்வும் கூர் தீட்டப்படும்.

'முதல் இந்திய சுதந்திரப் போர்' என்ற சிப்பாய் புரட்சிக்கு முன்பாகவே ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்த வர்கள் முஸ்லிம் மாவீரர்களே. அதிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் தியாகம் லி வீரப் போர், மெய்சிலிர்க்க வைத்தது.
2 லட்சம் பேர் சிப்பாய் புரட்சியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அதில் 51,200 பேர் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் ஆவார்கள். அவர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தனர், வீரமரணம் அடைந்தனர். தலைநகர் டெல்லியில் மட்டும் 500 உலமாக்கள் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மைகள் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
மன்னர் பகதூர்ஷா
ஆனால் மார்க்க நெறிகளை மட்டுமே வரையறைப்படுத்திய அந்த உலமா பெரு மக்கள் சிந்திய ரத்தம் இந்திய நாடு என்ற கம்பீர கட்டிடத்தின் ஒவ் வொரு செங்கலையும் சிவப்பாக்கி விட்டது.
முதல் அமைப்பு ரீதியான இந்திய சுதந்திரப் போர் அல்லது இந்தியப் புரட்சி என்பது 1857ல் ஏற்பட்டது. இதுவே சிப்பாய் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய புரட்சியை சிப்பாய் புரட்சி என்றே வரலாற்று நூல்களில் குறிக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவடைந்து பிரிட்டிஷ் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் முதல் சுதந்திரப் போர் முதல் வெற்றியை ஈட்டியது. அதன்பிறகு இந்தியத் துணைக்கண்டம் 90 ஆண்டுகாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. லண்டன் இந்திய நிர்வாகத்தின் தலைமைப்பீடமாக மாறியது. லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் இந்தியாவின் உச்சநீதிமன்றமாக அறியப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள தானா பவனிலும் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்கள் பொங்கி வெடித்தனர். உலமாக்கள் பிரிட்டிஷாரை எதிர்த்து வீர சமர் புரிந்தனர். ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிரி மக்கீ என்பவரின் தலைமையில் நடைபெற்ற புரட்சிப் போர் ஆங்கிலேயரை அதிர வைத்தது. ஷம்லி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் சிதறடிக்கப்பட்டனர். இதில் உலமாக்கள் காட்டிய வீரம் செறிந்த போரினை ஆங்கிலேயர்கள் மறக்க இயலாது. தற்போது முதல் சுதந்திரப் போரின் 150ஆம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. முதல் இந்திய சுதந்திரப் போர் வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரர்களின் வரிசையில் ஹாஜி இம்தாதுல் லாஹ் முஹாஜிரி மக்கி போற்றப்பட்டிருக்க வேண்டிய மாவீரர் ஆவார்.
உலமாக்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இயல்பாகவே அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் எதிர்ப்பதை அடிப்படை கடமையாக இஸ்லாம் போதிப்பதால் அதை வழிமொழிந்து பின்பற்ற வேண்டிய முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து ஆர்த்தெழுந்ததில் வியப்பில்லை.
வங்காள மாவீரன் சிராஜுத் தவ்லா, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை எதிர்த்து வீரமரணம் அடைந்ததிலிருந்தே முஸ்லிம்களின் வீரப்போர் தொடங்கி விட்டது என்பதே வரலாற்று உண்மையாகும்.
உலமாக்களின் வீரம் செறிந்த விடுதலைப் போர் தியாக வரலாறு குறித்து பிரிட்டிஷ் தரைப்படைத் தளபதி தாம்ஸன் (தங்க்ஷங்ப்ப்ண்ர்ய் ஈப்ங்ழ்ண்ஸ்ரீள் பக்கம் 49ல்) தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
ஷா வலியுல்லாஹ் (1703லி1762)
ஷா வலியுல்லாஹ் தெஹ்லவி, ஆங்கிலே யருக்கு எதிரான புரட் சிக்கு தலைமை தாங்கி னார். ஐரோப்பிய ஆட்சி யாளர்கள் ஊழல் முறை கேடுகளுடன் இந்த உலகின் பல பகுதிகளை யும் அடக்குமுறைக்கு உட்படுத்தினார்கள். முழுக்க ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு எதிராகவே பொங்கியெழ வேண்டும் என அழைப்பு விடுத்தார். அவர் ஹஜ் புனிதப் பயணத்தின் போது ஆக்கிரமிப்பு சக்திகளை அகற்றி சமத்துவம் சமநீதி கொண்ட சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது.
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியையும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள் விரும்பிய ஆட்சி வீழ்த்தப்பட்ட காட்சிகளையும் அவர் கண்டார். 1707ல் மாமன்னர் அவ்ரங்கஜேப் காலமானார். ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தனது அதிகார ஆட்டத்தைத் துவங்கியது. 1757ல் பிளாசி போர்முனையில் வங்கத்து மாவீரன் சிராஜுத் தவ்லாவை துரோகத்தின் துணை கொண்டு ஆங்கிலேயர் வீழ்த்தினர். மனிதநேயத்தை மீட்கவும் அடிமைத் தனத்தை அழிக்கவும் ஷா வலியுல்லாஹ் உறுதி பூண்டார். 'ஹுஜ்ஜத்துல்லாஹி பலிகா' என்ற தனது நூலில், உழைக்கும் மக்களே சமுதாயத்தின் உண்மைச் சொத்து என்றார். சமூகத்திற்கு உடலாலும் மூளையாலும் உழைப்பவர்கள் யாரோ அவரே சிறந்தவராக இருக்க முடியும் என்றார். விடுதலை உரிமை நம்நாட்டு சொத்துக் களின் மீதான பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும் என்றார். இவரது வரலாறு லி பாடப்புத்தகங்களில் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது.
திப்பு சுல்தானின் தியாக பூமி
வீரத் திப்புவின் தியாகம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்கத்தையும் உத்வேகத் தையும் அளித்தது. 1757 முதல் 1857 வரை அவ்ரங்கஜேப்பின் வாரிசுகள் தனியாக பலம் பொருந்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டனர். முஸ்லிம்கள் அனை வருக்கும் சுதந்திர நெருப்பூட்டியவர் மாவீரன் திப்பு சுல்தான். மே மாதம் 4ஆம் தேதி 1799ல் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப்பட்டினம் போர்க் களத்தில் வீர மரணம் அடைந்தபோது, தரையில் வீழ்ந்து கிடந்த அவரது உடலைப் பார்த்து ஆங்கிலேய ஆட்சியாளர் லார்டு ஹாரிஸ் என்பவன் கொக்கரித்தான். 'இப்போது இந்தியா எங்களுடையதாகி விட்டது' என் றான். அந்த மாவீரனின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு சவால்விடும் அளவுக்கு எந்த ஆட்சியாளரும் தோன்ற வில்லை என்பதே வரலாற்று உண்மை.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஃபத்வாக்கள்
1803ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏகாதி பத்தியம் டெல்லியை கைப்பற்றியது. கொதித்தெழுந்தார் மார்க்க அறிஞர் ஷா வலியுல்லாஹ்வின் மகன் ஷா அப்துல் அஜீஸ் தெஹ்லவி. ஆங்கிலேய ஆதிக்கத் துக்கு எதிரான ஃபத்வாக்களை பிரயோகித் தார். முதல் ஃபத்வா நமது நாடு அடிமைப் படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் அடிமைத் தனத்தை மீட்க விடுதலைப் போராட்டத்தை துவக்குவது நமது முக்கியக் கடமை என அந்த ஃபத்வா குறிப்பிடுகிறது.
ஸையத் அஹ்மத் ஷஹீத் (1786லி1831)
ஸையத் அஹ்மத் ஷஹீத், உத்தரப்பிரதேச மாநில ரெய்பரேலியின் விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் இந்த மார்க்க அறிஞர். 1808ல் இவரது வீர வரலாறு தொடங்குகிறது. மஹாராஜா ஜஸ்வந்த் ராவ் மற்றும் நவாப் அமீர் அலிகான் இருவரும் இணைந்து ஆங்கில அரசுக்கு எதிராகப் போராடினர். மார்க்க அறிஞர் ஷா அப்துல் அஜீஸ் தனது மாணவருக்கு கட்டளையிட்டார். உடனடியாக ஸையத் அஹ்மத் ஷஹீத் தனது படையை நவாப் அமீர் அலி படையினருடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இருவரும் இணைந்து ஆறு ஆண்டுகள் ஆங்கில அரசை எதிர்த்துப் போராடினார்கள். ஸையத் அஹ்மத் ஷஹீத் தலைமையில் எல்லைப்புறத்தில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை துவக்கினர். அது பல ஆண்டுகள் நீடித்தது. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தை எதிர்த்து முதன்முறையாக எழுந்த அரசு அது என்பது குறிப்பிடத்தக்கது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு முன்பாகவே ஓர் சுதந்திர அரசை நிறுவியவர் ஒரு முஸ்லிம் மார்க்க அறிஞர்தான் என்பது வரலாற்றின் பக்கங்களில் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. பஞ்சாபை ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து மீட்பதற்காகப் போராடிய ரஞ்சித்சிங் குறித்து மட்டும்தான் பாடப்புத்தகங்ளில் காணப்படுகிறது. இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள பஞ்சாபின் முஜாஹிதீன்களின் உதவியுடன் சுதேசி பட்டான் படை என்ற பெயரில் புரட்சி நடத்திய மக்களின் பலகோட் போர்க்களத்தில் ஆங்கிலேயர்களை வீரத்துடன் எதிர்த்த மக்களைப் பற்றிய குறிப்பும், பலகோட் போர்க்களத்தில் 300 பேர் வீரமரணம் அடைந்தனர் என்ற உண்மை வரலாறும் ஒன்றுபட்ட இந்தியாவை ஆங்கிலேயரிட மிருந்து மீட்க உயிர்த்தியாகம் செய்த தகவல்கள் பதிவு செய்யப்படவே இல்லை.
இந்தப் போராட்டத்தை சாதிப்பூர் உலமா முன்னெடுத்தார். 1845 முதல் 1871 வரை ஆங்கிலேயரை எதிர்த்து சாதிப்பூர் உலமா தலைமையிலான போராட்டம் தீவிர மடைந்தது. 1857ல் நிகழ்ந்த முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான உடனடிப் போரை தொடங்க வேண்டும் என 34 உலமாக்கள் ஃபத்வா வழங்கினர். மவ்லானா காசிம் (தேவ்பந்த் மதரஸாவின் நிறுவனர்) மற்றும் மவ்லானா ரஷீத் அஹ்மத் மற்றும் ஹஃபீஸ் ஜமீன் உள்ளிட்ட உலமாக்களும் ஹாஜி இம்தாதுல்லாஹ் தலைமையில் ஷாம்லி போர்க்களத்தில் போராடி வீர மரணம் அடைந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வர்த்தக சமூகத்திற்கும் ஆதிக்கசாதிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் விதமாகவே செயல்பட்டு வந்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த ராணுவமும் இத்தனைக் கொடூரமாக நடந்திருக்க முடியாது என நினைக்கும் வண்ணம் படுகொலைகளை இந்தியாவெங்கும் நடத்தி வந்தனர். இது ஒரு பிரிட்டிஷ் வீரரின் உரிமை என்றே அவர்கள் கருதினர்.
முஸ்லிம் சிற்றரசான அவ்த்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ஒரு லட்சம் பேர் பொதுமக்கள் என்பது அதிரவைக்கும் உண்மையாகும். சிறந்த உருதுக்கவிஞரான மிர்ஸா காலிஃப் எழுதுகிறார்: ''என் முன்னால் ரத்த ஆறு ஓடியதை நான் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் கொல்லப் படுவதை நான் பார்த்தேன். ஒருபுறம் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக் கப்படுவதைப் பார்த்தேன்'' என்று தனது கவிதையில் குறிப்பிடுகிறார்.
பஹதூர்ஷா ஜாஃபரின் வீர புதல்வர்கள் மூவரும் ஹூனி தர்வாஜா என்ற பகுதியில் பொதுமக்களின் மத்தியில் படுகொலை செய்யப்பட்டனர். கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பஹதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார். 1862ல் உயிர் துறந்தார். சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார். அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம். ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார். பலமிக்க பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து உலமாக்கள் வீர சமர் புரிந்தார்கள்.
1857 முதல் சுதந்திரப் போர் தோல்வியில் முடிந்தது என்று கூறுவார்கள். ஆனால் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியை அதுதான் விரட்டியடித்தது. 'மவ்லவி' என்ற சொல்லைக் கேட்டாலே ஆங்கிலேயர்கள் அலறினர். தீவிரவாதிகள் என்ற பெயரிட்டு ஆவணங்களிலும் குறித்தார்கள். ஜான்ஸிராணி லக்குமிபாய், மங்கள் பாண்டே போன்றவர்களை மட்டுமே போற்றிப் பாடும் இந்திய வரலாற்று ஆசிரியர்கள், கல்வித்துறை வல்லுனர்கள்(!) உண்மைகளை மறைத்து விட்டனர். இருப்பினும் எம் இந்திய தேசம் முழுக்க முழுக்க அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடாக மாறும்போது மவ்லவிகள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்கள் பற்றிய உண்மைகளும் உலகில் உரத்து ஒலிக்கும்

இன்னிக்கு என்னா

சென்னைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அமெரிக்க அனு நாசகார கப்பல் சென்னையை விட்டு அகன்றது.நாசகார கப்பலோடு அனுவிஞ்ஞானிகளும் வந்திருக்க கூடும் என உளவுத்துறையினர் ச்ந்தேகம் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் ஆண்டுக்கு முப்பது சதவீதத்தினர் இதய் நோயால் இறந்து வருவதாக தமிழகசுகாரத்துறைச் செயலர் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலம் இந்தியாவில் முப்பது சதவீதத்தினருக்கு இதயம் உள்ளது நிரூபிக்கப்பட்டிருப்பத்தாக குறும்புக்காரர் ஒருவர் கூறூகிறார்.

தமிழகத்தில்பொறியியல் கல்லூரிகளில் புதிதாக மூன்றாயிரம் சீட்கள் உருவாக்கப்படுமென அண்ணா பல்கலைக்கழகதுனை வேந்தர் டி விஸ்வநாதன் தெரிவித்திரிக்கிறார்.



ஒருநாட்டின் மீதோ சமூகத்தின் மீதோ தீவிரவாத முத்திரை குத்துவது விபரீத விளைவுகளுக்கு வழி வகுக்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர் எனப்பிரித்துபார்ப்பது பிரச்சனை தீர்க்க உதவாதுஎன்றார்.இது குறித்து பிரிட்டன் பிரதமரிடம் பேசியதாக வும் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

Thursday, June 14, 2007

காஷ்மீரை நசுக்க இஸ்ரேல் படை
அபூசாலிஹ்காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவத்திற்கு உதவுவதற்காக இஸ்ரேலிலிருந்து ராணுவக் குழு ஒன்று எதிர்வரும் வாரம் இந்தியாவுக்கு வருகிறது.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருகிறதாம். அதனை இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம். எனவே தீவிரவாதத்தை ஒடுக்குவதில் புகழ் பெற்ற(?) இஸ்ரேலிய ராணுவத்தின் உதவியை இந்திய ராணுவம் கேட்டுப் பெற்றுள்ளதாம்!
அதனால் இஸ்ரேலிய ராணுவத்தின் தரைப்படை துணைத் தளபதி மோஷி கபிலன்ஸ்கி தலைமையில் ராணுவக்குழு ஒன்று எதிர்வரும் வாரம் வரவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்தவகையான தீவிரவாதம்? என்று குறிப்பிடவில்லையே!
பதவிகளுக்காகவும், விருதுகளுக் காகவும், அப்பாவி மக்களை என் கவுண்டர் என்ற பெயரில் கொன்ற சில ராணுவ மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு படையின் தீவிரவாதம் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் நீதித்துறையும் கவலை தெரிவிக்கின்றனரே.. அந்த வகை தீவிரவாதம் குறித்துதான் ஆய்வு செய்ய இஸ்ரேலிய ராணுவம் வருகிறதா என்றால் இல்லையாம்! எல்லை கடந்த பயங்கர வாதத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவக்குழு வருகிறதாம்.
இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை யாம். அவர்களுக்கு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுப்பதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவு வருகிறதாம். கடந்த மே மாதத்தில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக் குள் ஊடுருவ முயன்ற 11 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். 7 இடங்களில் ராணுவத்தின ருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்தது. ஆனால் இதில் மனித உரிமை மீறல்கள் அதிகம் அதிகம் இருந்ததாக தகவல்கள் வெளியாயின.
காஷ்மீரில் மட்டும்தான் அனாதைகள் அதிகம். விதவைகளின் எண்ணிக்கை விலைவாசி போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. போலி என்கவுண்டர்களால் உயிர்கள் பறிக்கப்படுபவர்களும் ஏராளம். இத்தனை அக்கிரமங்களும் அடாத செயல்களும் நடைபெற்ற அந்த பரிதாபப் பிராந்தியத்தில் காஷ்மீர் என்ற நிலப்பரப்பை நேசிக்கிறார்களேயொழிய காஷ்மீர் மக்களை நேசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. ஊடகங்களும், திரைப்படங்களும் காஷ்மீரை ஒரு பதட்டப் பிரதேசமாகவும், ஒரு வன்முறை பூமியாகவும் சித்தரித்துக் காட்டுவதில் இருக்கும் அக்கறை அம்மக்களின் மீது நேசத்தைக் காட்டுவதில் இருக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் தேடுதல் வேட்டையும், பயங்கரவாத எதிர்ப்புப் போரும் கடும் விமர்சனத்துக் குள்ளான நிûயில், உலகிலேயே மனிதகுல விரோதச் செயல்களைப் புரிவதில் முதலிடத்தில் இருக்கும் இஸ்ரேலின் ராணுவம் காஷ்மீர் பிராந்தியத்திற்கு வரவழைக்கப்படுவதின் மர்மம் என்ன?
இஸ்ரேல் என்ற ஒரு தீய சக்தியின் கோரக் கரங்கள் கள்ளம் கபடமில்லா காஷ்மீர மக்களின் மீது பாய்வது போன்ற ஒரு கொடும் செயலை நடக்குமானால் அது இந்திய அமைதியை கெடுப்பதற்கு திறவுகோலாகவே அமையும்.
அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்த, லெபனானின் பச்சிளம் பாலகர்களைக் குண்டுவீசிக் குதறிய யூத வெறி நாய்களை காஷ்மீருக்குள் அனுமதிக் கலாமா?
கத்தியின்றி ரத்தமின்றி சாதித்த காந்தியடிகள் போன்ற வர்கள் தந்த இந்தியா எங்கே? 60 ஆண்டுகளாக அரபக பூமியில் அமைதியைக் குலைத்து ரத்தம் குடிக்கும் ஓநாய் நாடு இஸ்ரேல் எங்கே? சற்றும் பொருந்தாத நாகரீகமற்ற இந்த இரு நாட்டு உறவுகள் நீடிக்கக் கூடாது.
சமயசார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்ட இந்தியா யூத இன, மதவெறி நாட்டை அங்கீகரிக்காமலும், தூதரக உறவை ஏற்படுத்திக் கொள்ளாமலே 1991 வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைந்திருந்தது.
நேரு இஸ்ரேலை கிஞ்சிற்றும் மதிக்க வேயில்லை. இந்திராவின் காலத்தில் பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபத் துக்கு சிவப்புக் கம்பளத்துடன் கூடிய அரச வரவேற்பு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குரலை இந்தியா ஓங்கி ஒலித்தது. இன்று இந்தியா தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவை வரவழைக்கிறதாம்... இதைவிட அவமானம் இந்தியாவுக்கு உண்டா? தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அதன் வேர் காரணத்தை அறிய வேண்டும். காஷ்மீரைக் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து காஷ்மீரிகளை நேசிக்க இந்தியா தயாராக வேண்டும். அதை விடுத்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உலக தீவிரவாதியை அழைத்து வருவது அடிமுட்டாள்தனமான வேலையாகும்.
ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போன இந்திய ராணுவம், பாதுகாப்பு படை போன்றவைகளின் செயல்பாடுகளிலேயே மனித உரிமை அத்துமீறல் புகார்கள் வெடித்துக் கிளம்பி வரும்போது ஜனித்ததே சாக்கடையில்தான் என்பதை உறுதிப்படுத்துவதைப் போல அராஜகத்தில் உதித்த இஸ்ரேலின் உதவியை இந்தியா நாடுவது ஏன்?
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் வல்லமையான நாடு. தாக்குதல்களில் துல்லியம் நிறைந்த என்ற வீரசாகசத்தையெல்லாம் கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் நிகழ்ந்த லெபனான் போரில் ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் கிழிபட்டது. பெய்ரூட்டிலிருந்து துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்த இஸ்ரேலை இந்தியா நாடுவதும், ஹிஸ்புல்லாக் களின் ராக்கெட்டுகளிடம் சின்னாபின்னமான இஸ்ரேலின் மெர்க்கவா கவச வாகனங்களை ஆசை ஆசையாக இந்தியா வாங்குவதும், அவமானத்தின் உச்சமல்லவா?
இஸ்ரேலுடனான அனைத்துவித தொடர்புகளையும் இந்தியா அறுத்தெறியாவிடில் இந்தியாவின் மாண்பு கேள்விக்குறியாகி விடும். 25 கோடி முஸ்லிம்களைக் கொண்ட இந்தியப் பெருநாட்டின் இந்தச் செயல் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொள்வதற்கு சமமானது என எச்சரிக்கிறோம்
தீவிரவாதம் பெருகி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இந்திய ராணுவத்திற்கு உதவுவதற்காக இஸ்ரேலிலிருந்து ராணுவக் குழு ஒன்று எதிர்வரும் வாரம் இந்தியாவுக்கு வருகிறது.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி வருகிறதாம். அதனை இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லையாம். எனவே தீவிரவாதத்தை ஒடுக்குவதில் புகழ் பெற்ற(?) இஸ்ரேலிய ராணுவத்தின் உதவியை இந்திய ராணுவம் கேட்டுப் பெற்றுள்ளதாம்!
அதனால் இஸ்ரேலிய ராணுவத்தின் தரைப்படை துணைத் தளபதி மோஷி கபிலன்ஸ்கி தலைமையில் ராணுவக்குழு ஒன்று எதிர்வரும் வாரம் வரவிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் தீவிரவாதம் பெருகி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்தவகையான தீவிரவாதம்? என்று குறிப்பிடவில்லையே!
பதவிகளுக்காகவும், விருதுகளுக் காகவும், அப்பாவி மக்களை என் கவுண்டர் என்ற பெயரில் கொன்ற சில ராணுவ மற்றும் எல்லைப்புற பாதுகாப்பு படையின் தீவிரவாதம் குறித்து மனித உரிமை ஆர்வலர்களும் நீதித்துறையும் கவலை தெரிவிக்கின்றனரே.. அந்த வகை தீவிரவாதம் குறித்துதான் ஆய்வு செய்ய இஸ்ரேலிய ராணுவம் வருகிறதா என்றால் இல்லையாம்! எல்லை கடந்த பயங்கர வாதத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ராணுவக்குழு வருகிறதாம்.
இந்திய ராணுவத்தால் தீவிர வாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை யாம். அவர்களுக்கு தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொடுப்பதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவு வருகிறதாம். கடந்த மே மாதத்தில் மட்டும் பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக் குள் ஊடுருவ முயன்ற 11 பேர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். 7 இடங்களில் ராணுவத்தின ருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் நடந்தது. ஆனால் இதில் மனித உரிமை மீறல்கள் அதிகம் அதிகம் இருந்ததாக தகவல்கள் வெளியாயின.
காஷ்மீரில் மட்டும்தான் அனாதைகள் அதிகம். விதவைகளின் எண்ணிக்கை விலைவாசி போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. போலி என்கவுண்டர்களால் உயிர்கள் பறிக்கப்படுபவர்களும் ஏராளம். இத்தனை அக்கிரமங்களும் அடாத செயல்களும் நடைபெற்ற அந்த பரிதாபப் பிராந்தியத்தில் காஷ்மீர் என்ற நிலப்பரப்பை நேசிக்கிறார்களேயொழிய காஷ்மீர் மக்களை நேசிக்க இங்கு யாரும் தயாராக இல்லை. ஊடகங்களும், திரைப்படங்களும் காஷ்மீரை ஒரு பதட்டப் பிரதேசமாகவும், ஒரு வன்முறை பூமியாகவும் சித்தரித்துக் காட்டுவதில் இருக்கும் அக்கறை அம்மக்களின் மீது நேசத்தைக் காட்டுவதில் இருக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தின் தேடுதல் வேட்டையும், பயங்கரவாத எதிர்ப்புப் போரும் கடும் விமர்சனத்துக் குள்ளான நிûயில், உலகிலேயே மனிதகுல விரோதச் செயல்களைப் புரிவதில் முதலிடத்தில் இருக்கும் இஸ்ரேலின் ராணுவம் காஷ்மீர் பிராந்தியத்திற்கு வரவழைக்கப்படுவதின் மர்மம் என்ன?
இஸ்ரேல் என்ற ஒரு தீய சக்தியின் கோரக் கரங்கள் கள்ளம் கபடமில்லா காஷ்மீர மக்களின் மீது பாய்வது போன்ற ஒரு கொடும் செயலை நடக்குமானால் அது இந்திய அமைதியை கெடுப்பதற்கு திறவுகோலாகவே அமையும்.
அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்த, லெபனானின் பச்சிளம் பாலகர்களைக் குண்டுவீசிக் குதறிய யூத வெறி நாய்களை காஷ்மீருக்குள் அனுமதிக் கலாமா?
கத்தியின்றி ரத்தமின்றி சாதித்த காந்தியடிகள் போன்ற வர்கள் தந்த இந்தியா எங்கே? 60 ஆண்டுகளாக அரபக பூமியில் அமைதியைக் குலைத்து ரத்தம் குடிக்கும் ஓநாய் நாடு இஸ்ரேல் எங்கே? சற்றும் பொருந்தாத நாகரீகமற்ற இந்த இரு நாட்டு உறவுகள் நீடிக்கக் கூடாது.
சமயசார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்ட இந்தியா யூத இன, மதவெறி நாட்டை அங்கீகரிக்காமலும், தூதரக உறவை ஏற்படுத்திக் கொள்ளாமலே 1991 வரை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமைந்திருந்தது.
நேரு இஸ்ரேலை கிஞ்சிற்றும் மதிக்க வேயில்லை. இந்திராவின் காலத்தில் பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபத் துக்கு சிவப்புக் கம்பளத்துடன் கூடிய அரச வரவேற்பு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிரான போர்க்குரலை இந்தியா ஓங்கி ஒலித்தது. இன்று இந்தியா தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இஸ்ரேலிய ராணுவப் பிரிவை வரவழைக்கிறதாம்... இதைவிட அவமானம் இந்தியாவுக்கு உண்டா? தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அதன் வேர் காரணத்தை அறிய வேண்டும். காஷ்மீரைக் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து காஷ்மீரிகளை நேசிக்க இந்தியா தயாராக வேண்டும். அதை விடுத்து தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு உலக தீவிரவாதியை அழைத்து வருவது அடிமுட்டாள்தனமான வேலையாகும்.
ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போன இந்திய ராணுவம், பாதுகாப்பு படை போன்றவைகளின் செயல்பாடுகளிலேயே மனித உரிமை அத்துமீறல் புகார்கள் வெடித்துக் கிளம்பி வரும்போது ஜனித்ததே சாக்கடையில்தான் என்பதை உறுதிப்படுத்துவதைப் போல அராஜகத்தில் உதித்த இஸ்ரேலின் உதவியை இந்தியா நாடுவது ஏன்?
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் வல்லமையான நாடு. தாக்குதல்களில் துல்லியம் நிறைந்த என்ற வீரசாகசத்தையெல்லாம் கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் நிகழ்ந்த லெபனான் போரில் ஹிஸ்புல்லாஹ் போராளிகளிடம் கிழிபட்டது. பெய்ரூட்டிலிருந்து துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் பிடித்த இஸ்ரேலை இந்தியா நாடுவதும், ஹிஸ்புல்லாக் களின் ராக்கெட்டுகளிடம் சின்னாபின்னமான இஸ்ரேலின் மெர்க்கவா கவச வாகனங்களை ஆசை ஆசையாக இந்தியா வாங்குவதும், அவமானத்தின் உச்சமல்லவா?
இஸ்ரேலுடனான அனைத்துவித தொடர்புகளையும் இந்தியா அறுத்தெறியாவிடில் இந்தியாவின் மாண்பு கேள்விக்குறியாகி விடும். 25 கோடி முஸ்லிம்களைக் கொண்ட இந்தியப் பெருநாட்டின் இந்தச் செயல் கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொள்வதற்கு சமமானது என எச்சரிக்கிறோம்

Thursday, May 31, 2007

ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம் பெருமிதம்



ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை திப்புசுல்தான்இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கழகம் பெருமிதம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்தவர் திப்பு சுல்தான். ஆங்கி லேயரை நடுநடுங்க வைத்த அந்த மாவீரன், போர் வியூகத்திலும், படைக்கலத் தயாரிப் பிலும் சிறந்து விளங்கினார்.226 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராணுவத் தொழில்நுட்பத்திலும், வல்ல மையிலும் திப்பு சுல்தான் படை சிறந்து விளங்கி ஆங்கி லேயப் படைகளை திணறடித்தது.மைசூர் சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் திப்பு சுல்தானின் கோட்டையும், படைக்கலத் தயாரிப்பு தொழிற்சாலையும் இருந்த அவல நிலை குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.அந்தக் கடிதத்தை இந்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத்துறை தலைவர் எஸ்.டி. பிள்ளையன் பார்வைக்கு அனுப்பினார் குடியரசுத் தலைவர்.பிறகென்ன... ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ராணுவ தொழில்நுட்ப வரலாறு ஒரு புதிய செய்தியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருந்த தகவல் உலகுக்குத் தெரிய வந்தது. திப்பு சுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தின் தந்தை என்பதும், ஏவுகணைகளைப் பயன்படுத்தியதில் முன்னோடி எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.உள்ளூர் மக்களால் புறக்கணிக்கப் பட்ட ஸ்ரீரங்கப்பட்டினத்தில் பழமை வாய்ந்த பகுதிகளில் ராணுவ வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுக்காக சுற்றியபோது பல பகுதிகள் இவர்களால் அடையாளம் காணப்பட்டன.எதிரி முகாம்களை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் வகையில் ஏவுகணை ஏவும் தளங்களை அவர்கள் கண்ணெதிரே கண்டனர்.இந்திய அரசு, விஞ்ஞானிகளின் சாதனைகளை ஆவணப்படுத்தி அறிஞர் கள் மற்றும் அவர்களின் விஞ்ஞான பாரம்பரியம், அவர்களின் சேவைகள் குறித்தும் ஆய்ந்து வரும் வேளையில் திப்பு சுல்தான் மற்றும் அவர் தந்தையார் ஹைதர் அலியின் நன்கொடைகள் குறித்து சிலாகித்துப் பேசுகிறார் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தின் முதன்மைக் கண்காணிப்பாள ரான டாக்டர் ஏ.எஸ். சிவதாணு பிள்ளை.சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர் திப்புசுல்தான் என்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது அங்கீகரித்துள்ளனர்.நவீனகால ராணுவ வரலாற்றில் ராக்கெட் படையினை பயன்படுத்தியவர் மைசூர் புலி திப்புசுல்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி யுள்ளனர். 6000 படை வீரர்களைக் கொண்ட 27 தளபதிகளைக் கொண்ட திப்பு சுல்தானின் முழுமையான ஏவுகணைப் படைப்பிரிவு 1792ல் நிகழ்த்திய சாகசங்கள் பிரிட்டிஷ் படைகளின் பின்னடைவுக்கு காரண மாகிறது. வீரத் திப்புவின் படைகள் பயன் படுத்திய ராக்கெட்டுகள் லண்டன் மாநகரில் உள்ள 'உல் விச்' அருங்காட்சியகத் தில் தற்போது உள்ளது.ஸ்ரீரங்கப்பட்டினம் நவீனகால ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில் நுட்பத்தின் தொட்டில் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி பயன்படுத்திய ய2 ராக்கெட்களுக்கு முன்னோடியாக திப்புவின் ராக்கெட் தொழில்நுட்பம் இருந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.திப்புவின் ராக்கெட் 2.2 கிலோ கிராம் முதல் 5.5 கிலோ கிராம் வரை இருந்தது. ராக்கெட்களை போர்க்களத்தில் பயன்படுத்திய முதல் மாவீரன் திப்பு சுல்தான் என்பதும் உலகிற்கு தெரிவிக்க விரும்புவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.மாவீரன் திப்பு துரோகத்தால் வீழ்ந்த 1799ஆம் ஆண்டுக்குப் பிறகு 700 ராக்கெட்களும், 900 சிறிய வகை ராக்கெட்களும் லண்டன் ராயல் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது.இரண்டு கிலோ மீட்டர் பாய்ந்து சென்று எதிரிகளின் இலக்குகளைத் தாக்கும் திப்புவின் ஏவுகணைகள் இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தையும், வீரத் திப்புவின் போர் நிபுணத்துவத்தையும் விளக்குவண்ணம் உள்ளது.டாக்டர் பிள்ளை, குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் தலைமையின் கீழ் ராக்கெட் விஞ்ஞானியாய் பணிபுரிந்தவர். விலை மதிப்புமிக்க இந்த வரலாற்றுத் தகவல்களை ஆராய தூண்டுகோலாய் விளங்கிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நன்றி கூறிய சிவதாணு பிள்ளை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து தங்கள் குழுவின் ஆய்வின் விவரங்களை தெரிவிக்கப் போவதாகக் கூறினார்.இன்னும் இரண்டொரு மாதத்தில் தனது முழு ஆய்வறிக்கையை பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்துள்ளது.நாஸாவில் கலாம் கண்ட காட்சிஇந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி அணுஆயுத எழுச்சி, ராணுவத் தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அத்தனை ஏற்றங்களுக்கும் முக்கியக் காரணமாக விளங்கிய அறிவியல் அறிஞரும் இந்தியக் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல் கலாம், தனது ஆராய்ச்சிக் பணிக்காலத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவிற்குச் சென்றபோது தான் கண்ட காட்சியை நாட்டு மக்களுக்கு தனது 'அக்கினிச் சிறகுகள்' நூலில் விவரித்துள்ளார்.''எனது பயணத்தின் இறுதிக் கட்டமாக வாலப்ஸ் ஃப்ளைட் ஃபெசிலிட்டி (ரஹப்ப்ர்ல்ள் எப்ண்ஞ்ட்ற் எஹஸ்ரீண்ப்ண்ற்ஹ்) மையத்திற்குச் சென்றேன். இந்த மையம் வர்ஜீனியா மாகாணத்தில் கிழக்குக் கடற்கரைத் தீவான வாலப் ஸில் அமைந்துள்ளது. நாஸாவின் சவுண்டிங் ராக் கெட் திட்டத்திற்கு இந்த மையம்தான் அடித்தளம். இங்கே, வரவேற்புக் கூடத்தில் ஓர் ஓவியம் பிரதானமாகக் காட்சியளித்தது. ஒரு சில ராக்கெட்டுகள் பறந்து கொண்டிருக்கும் பின்னணியுடன் போர்க்களக் காட்சி ஒன்றை ஓவியமாக அங்கே தீட்டியிருந் தார்கள். இந்தக் காட்சியைக் கருவாகக் கொண்ட ஒரு ஓவியம் இப்படிப்பட்ட இடத்தில் இருப்பது ஒன்றும் வியப்பான விஷயம் அல்ல. ஆனால் என் கவனத்தை ஈர்த்தவர்கள், அதில் சித்தரிக்கப்பட்டிருந்த படை வீரர்கள்! ராக்கெட்டுகளை ஏவும் பகுதியில் காணப்பட்ட அவர்கள் வெள்ளை நிறத்தவர்கள் அல்ல. தெற்காசிய மக்களிடம் காணப்படும் உருவ அமைப்புடன் கருப்பு நிறம் கொண்ட படை வீரர்கள், அவர்கள். ஒரு நாள், எனக்குள் ஊற்றெடுத்த ஆர்வம், அந்த ஓவியத்தின் அருகே என்னை இழுத்துச் சென்றது. திப்பு சுல்தானின் படை வெள்ளையர்களுடன் போரிடும் காட்சியை அதில் கண்டேன். திப்பு சுல்தானின் சொந்த தேசத்தில் மறக்கப்பட்டுவிட்ட ஒரு உண் மையை இந்தக் கிரகத்தின் இன்னொரு பகுதியில் நினைவுகூர்ந்து போற்றப் படுவதை அந்தச் சித்திரம் உணர்த்தியது. ராக்கெட் போர்த் தந்திரத்தின் நாயகனாக ஒரு இந்தியனை நாஸா பெருமைப்படுத்தி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டேன்.''சர்வதேச ஏவுகணை தொழில்நுட்ப தந்தையான திப்பு சுல்தானைப் பற்றி நவீன இந்திய ராணுவ தொழில்நுட்ப மேதை டாக்டர் அப்துல் கலாம் குறிப்பிடுவது பொருத்தமானதுதானே?

குஜராத் : அந்த 526 பள்ளிவாசல்கள்?.


குஜராத் : அந்த 526 பள்ளிவாசல்கள்?குஜராத் கோர படுகொலைகளை யாராலும் மறக்க இயலாது. ஆயிரக்கணக்கான முஸ்­ம்கள் படுகொலை செய்யப் பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளானார்கள்.இழப்பீடுகள், நிவாரண உதவிகள் அந்த அப்பாவிகளுக்கு மறுக்கப்பட்டன. முறையான நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை. நரேந்திர மோடி அரசு முன்நின்று நடத்திய வெறியாட்டங்கள் ஓர் தேசிய அவமானமாக கருதப்பட்டது.இனப்படுகொலையின் சூத்திரதாரியான நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டார். அமெரிக்கா வுக்கும் லி பிரிட்டனுக்கும் செல்ல விசா மறுக்கப்பட் டது. அந்த வகையில் மோடி உலகப் புகழ்(!) பெற்று விட்டார்.2002ல் நிகழ்ந்த குஜராத் கோரக் கலவரத்தில் 526 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்ததை எண்ணி முஸ்­ம்களும், நடுநிலையாளர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.அன்றி­ருந்து முஸ்­ம்கள் தங்கள் பள்ளிவாசல்களை மீண்டும் கட்ட, புனர மைக்க மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். இடிப்பதற்கு பேர் போண அவர்கள் கட்டுவதற்கு உதவுவார்களா என்ன?கேளாக் காதினராய் மோடி அரசு இருந்து விட்டது. இதுகுறித்து தேசிய சிறுபான்மை ஆணையம் 2002 ஏப்ரல் இரண்டாம் தேதி கடிதம் ஒன்றை குஜராத் முதல்வர் மோடிக்கு எழுதியது. இக்கடிதம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத தோடு, அந்தக் கடிதம் வந்ததாகவே மோடி அரசு காட்டிக் கொள்ளவில்லை.இதற்கிடையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஏற்பாட்டில் முஸ்­ம் களுக்கு சொந்தமான 294 பள்ளிவாசல் கட்டிடங்கள் ஓரளவு பழுது பார்க்கப் பட்டன. இதற்கு எந்த அரசும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.இதற்கிடையில் தேசிய சிறுபான்மை ஆணையம் மோடி அரசுக்கு தொடர்ந்து கடிதங்களை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தது. அண்மையில் கடந்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் கடிதத்திற்கு சுருக்கமான பதில் ஒன்றை குஜராத் அரசு அனுப்பியது.அதில் நிவாரண உதவிகள் குறித்து எவ்வித விளக்கங்களும் குறிப்பிடப்பட வில்லை. மாறாக தேசிய சிறுபான்மை ஆணையம் அனுப்பிய கடிதம் உள் நோக்கம் கொண்டது என்றும், தவறான வழிகாட்டுத­ல் எழுதப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் தெளிவான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.மீதமுள்ள 232 பள்ளிவாசல் கட்டிடங்களை மறுகட்டமைக்க போதிய நிதி உதவியை வழங்குமாறு மத்திய அரசுக்கு தேசிய சிறுபான்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.தேவையான பொருளாதார உதவியை வழங்கி குஜராத்தில் சிதிலமடைந்து கிடக்கும் முஸ்­ம்களின் வழிபாட்டுத் தலங்களை புதுப்பிக்க மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிற