Friday, July 6, 2007

இன்னிக்கு என்னா

சென்னைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அமெரிக்க அனு நாசகார கப்பல் சென்னையை விட்டு அகன்றது.நாசகார கப்பலோடு அனுவிஞ்ஞானிகளும் வந்திருக்க கூடும் என உளவுத்துறையினர் ச்ந்தேகம் தெரிவித்துள்ளனர்

இந்தியாவில் ஆண்டுக்கு முப்பது சதவீதத்தினர் இதய் நோயால் இறந்து வருவதாக தமிழகசுகாரத்துறைச் செயலர் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலம் இந்தியாவில் முப்பது சதவீதத்தினருக்கு இதயம் உள்ளது நிரூபிக்கப்பட்டிருப்பத்தாக குறும்புக்காரர் ஒருவர் கூறூகிறார்.

தமிழகத்தில்பொறியியல் கல்லூரிகளில் புதிதாக மூன்றாயிரம் சீட்கள் உருவாக்கப்படுமென அண்ணா பல்கலைக்கழகதுனை வேந்தர் டி விஸ்வநாதன் தெரிவித்திரிக்கிறார்.



ஒருநாட்டின் மீதோ சமூகத்தின் மீதோ தீவிரவாத முத்திரை குத்துவது விபரீத விளைவுகளுக்கு வழி வகுக்கும் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருக்கிறார். முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர் எனப்பிரித்துபார்ப்பது பிரச்சனை தீர்க்க உதவாதுஎன்றார்.இது குறித்து பிரிட்டன் பிரதமரிடம் பேசியதாக வும் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

No comments: